முயல் என்று தவறாக கருதி சுட்டுக்கொல்லப்பட்ட சீன நாட்டவர்
![](https://iftamil.com/wp-content/uploads/2023/04/248-1.jpg)
முயல் என்று தவறாகக் கருதிய வேட்டைக்காரனால் சுட்டுக் கொல்லப்பட்ட சீன நாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏர் கன் மூலம் தலையில் சுடப்பட்டு நீரில் மூழ்கி வாங் மௌஜின் உயிரிழந்த வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நால்வரும் ஜியாங்சி மாகாணத்தின் ஷாக்சி நகருக்கு வேட்டையாடச் சென்ற போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சீனாவில் துப்பாக்கிகள் தொடர்பான சம்பவங்கள் அரிதாகவே நடைபெறுகின்றன.
திரு வாங் மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் அகழிக்கு அருகில் இருந்த புல்வெளியில் நடமாட்டத்தைக் கண்டு அவர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சின்சோ மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸார் தெரிவித்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட அதிகாரிகள் நான்கு பேரையும் கைது செய்தனர், அவர்களில் சிலர் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று கருதப்படுகிறது. விசாரணைகள் நடந்து வருகின்றன.
பிரேத பரிசோதனையில் திரு வாங் நீரில் மூழ்கி இறந்ததாக உறுதி செய்யப்பட்டது.