இலங்கை செய்தி

தேர்தலுக்கு தேவையான நிதியை நிதியமைச்சு வழங்காது – நீதிமன்றத்தை நாட தயார் என எச்சரிக்கை!

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை  நடத்துவதற்கான போதிய நிதியை நிதியமைச்சு வழங்கும்  என கருதவில்லை என்று இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் ஜி புஞ்சிவேவ தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் உத்தரவிட்டபடி நிதியமைச்சு உரிய நிதியை வழங்கும் என கருதவில்லை என தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக மீண்டும் நீதிமன்றத்தை நாடவேண்டியிருக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனினும் நீதிமன்றத்திடம் மீண்டும் செல்லும் நடவடிக்கையை ஏற்கனவே மனுதாக்கல் செய்தவர்களே முன்னெடுக்கவேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

திறைசேரி நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்தும் நிராகரித்து வருவதால் இது தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளிற்காக ஐக்கிய மக்கள் சக்தி நீதிமன்றத்தை நாடினால் தேர்தலை நடத்துவதற்காக அரசமைப்பின் மூலம் ஆணை வழங்கப்பட்ட நாங்கள் எங்கள் தரப்பு நியாயத்தை நீதிமன்றத்தின் முன்னிலையில் சமர்ப்பிக்க தயார் என புஞ்சிவேவா குறிப்பிட்டுள்ளார்.

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content