ஐரோப்பா செய்தி

ஜேர்மனில் விமான சேவைகள் ரத்து ; 27,000 பயணிகள் பாதிப்பு

ஜேர்மன் தலைநகரமான பெர்லின் உட்பட சில நகரங்களில் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜேர்மன் விமான நிலையங்கள் சிலவற்றில் விமான நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.இரவு நேரம், வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் வேலை செய்வதற்கு ஊதியம் வழங்குவது தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பாக அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

ஜேர்மன் தலைநகரமான பெர்லினில் மட்டும் 200 விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. இதனால், சுமார் 27,000 பயணிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இதுபோக, Bremen மற்றும் Hamburg விமான நிலைய ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் இறங்கியுள்ளார்கள். Hamburgஐப் பொருத்தவரை விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானங்கள் அனைத்தும், விமான நிலையத்துக்கு வரும் விமானங்களில் பாதியும் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக அந்நகர விமான நிலையம் தெரிவித்துள்ளது.

Bremen விமான நிலையத்திலோ எந்த விமானமும் புறப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.மொத்தத்தில் வேலைநிறுத்தத்தால் சுமார் 45,000 பயணிகள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஜேர்மன் விமானநிலையங்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி