செய்தி

கனடாமீதான 50 சதவீத வரியை இடைநிறுத்தினார் ட்ரம்ப்

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்கள் மீது விதிக்கப்படவிருந்த 50 சதவீத வரியை இடைநிறுத்தம் செய்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்கள் மீது விதிக்கப்படவிருந்த 50 சதவீத வரியை இடைநிறுத்தம் செய்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.

இந்த தடைகள் அமுலுக்கு வர சில மணி நேரங்களே இருந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே கடைசி நேரத்தில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, மேலதிகப் பேச்சுவார்த்தைகளுக்கான கால அவகாசத்தை வழங்கியுள்ளதுடன், இரு வரலாற்று நட்பு நாடுகளுக்கு இடையே நிலவி வந்த பதற்றமான உறவில் மேலும் விரிசல் ஏற்படுவதையும் தற்காலிகமாகத் தடுத்துள்ளது.

“கனடா மற்றும் அமெரிக்கா இடையே ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதன் அடிப்படையில் (ஆவணங்கள் இறுதி செய்யப்படுவதற்கு உட்பட்டு), நாளை காலை முதல் மூன் அமுலுக்கு வரவிருந்த 50 சதவீத வரியை நான் இடைநிறுத்தியுள்ளேன்” என்று டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

திட்டமிட்டபடி இந்த வரி விதிப்பு அமுலுக்கு வந்திருந்தால், ஹாக்கி மட்டைகள் முதல் மருத்துவப் பரிசோதனைக்கான tongue depressors வரையிலான பல்வேறு கனடிய பொருட்கள் மீது அமெரிக்காவின் இறக்குமதி வரி விதிக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி