ஐரோப்பா

ரஷ்ய தாக்குதல்களால் உக்ரைனில் ஆயிரக்கணக்கானோருக்கு மின்சாரம் துண்டிப்பு

உக்ரைனில் ரஷ்யா மேற்கொண்ட தாக்குதல்களால் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இன்றி சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

அமெரிக்கா தலைமையில் போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

ரஷ்ய தாக்குதல்களால் உக்ரைனின் ஏழு பகுதிகளில் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

“ரஷ்யா என்ன செய்கிறது என்பதை உலகம் இப்போது பார்க்க வேண்டும். இது போரை முடிப்பதற்கான முயற்சி அல்ல, உக்ரைனின் அரசையும் மக்களையும் அழிப்பதற்கான செயல்” என சமூக ஊடகங்களில் செலென்ஸ்கி பதிவிட்டுள்ளார்.

உக்ரைன் மற்றும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகள், ரஷ்யா உக்ரைனின் மின் கட்டமைப்புகளை திட்டமிட்டு இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொள்வதாகவும்
குற்றம் சுமத்துகின்றன

இதனிடையே, ரஷ்யாவின் தென்மேற்கு சரடோவ் பகுதியில் நடந்த ட்ரோன் தாக்குதலில் இருவர் உயிரிழந்ததாகவும், குடியிருப்பு கட்டிடமொன்று சேதமடைந்ததாகவும் ரஷ்ய அதிகாரிகள் கூறுகின்றனர்.

ரஷ்ய நிலப்பரப்பில் ஒரே இரவில் 41 உக்ரைனிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Sainth

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்