“புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அனைத்து அம்சங்களையும் மீறிவிட்டது அமெரிக்கா”
போர் நிறுத்தம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அனைத்து அம்சங்களையும் அமெரிக்கா மீறியுள்ளதாக ஈரானின் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாய் (Esmaeil Baghaei) குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) தற்போதைய நிலை குறித்து வெளியிடு கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
ஹொர்முஸ் நீரிணையில் ஈரானிய அதிகாரிகளால் ஒதுக்கப்பட்ட கப்பல் போக்குவரத்துப் பாதையைப் பயன்படுத்தாமல், அதற்குப் “இணையான மாற்றுப் பாதை” (Parallel route) ஒன்றை பயன்படுத்துமாறு கப்பல்களை அமெரிக்கா வற்புறுத்தி வருவதாக பகாய் குற்றம் சாட்டியுள்ளார்.
இது புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விதிகளுக்கு எதிரானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஈரான் போரை விரும்பவில்லை என்றும், தம்மீது திணிக்கப்பட்ட இந்தப் போரில் தங்கள் நாட்டைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளையே எடுத்து வருவதாகவும் Esmaeil Baghaei தெரிவித்துள்ளார்.




