ஐரோப்பா

ரஷ்யாவில உருகும் நிலத்தடி பனி – மிகப்பெரிய பள்ளத்தால் ஆபத்து குறித்து விஞ்ஞானிகள் அதிர்ச்சி

ரஷ்யாவில் நிலத்தடியில் உறைந்திருக்கும் பனி உருகி ஒரு மாபெரும் பள்ளம் உருவாகியுள்ளதால் விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்துள்ளது.

உலகளவில் உறைந்த நிலத்தடி மண்ணில் காணப்படும் மிகப்பெரிய பள்ளம் ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ளதெனவும் அந்த பெரும்பள்ளத்தின் ஆழம் சுமார் ஒரு கிலோமீட்டர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

பூமியில் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க அந்த உறைந்த நிலத்தடி மண் தொடர்ந்து உருகுகிறது. இது எதிர்வரும் ஆபத்துக்கான அறிகுறி என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

1960ஆம் ஆண்டுகளில் இப்பகுதியில் காடுகள் அழிக்கப்பட்டபோது இந்தப் பெரும்பள்ளம் முதலில் தோன்றியது.

நிலத்தில் உள்ள பனியின் அளவு குறைந்ததால் பூமியில் மண் அரிப்பு ஏற்பட்டது. அதனால் பள்ளத்தின் ஆழம் அதிகரித்தது. அது எவ்வளவு பெரிதாகிறது என்பதை உள்ளூர் மக்கள் கவனித்துவருகின்றனர்.

பள்ளம் எவ்வளவு வேகமாக விரிவடையும் என்று விஞ்ஞானிகளுக்குச் சரியாகத் தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் உலகின் மற்ற இடங்களைவிட ரஷ்யா குறைந்தது 2.5 மடங்கு வேகமாக வெப்பமடைகிறது என அவர்கள் கூறுகின்றனர்.

(Visited 14 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content