உலகம் செய்தி

ஈரான்மீதான தடைகளை தீவிரப்படுத்துமாறு அமெரிக்கா வலியுறுத்து!

ஈரான்மீதான பொருளாதாரத் தடைகளைத் தீவிரப்படுத்துமாறு G – 7 நாடுகளின் கூட்டத்தில் அமெரிக்காவின் திறைசேரிச் செயலாளர் Scott Bessent வலியுறுத்தியுள்ளார்.

பாரிஸில் நடைபெறும் G7 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

ஈரானின் சட்டவிரோத நிதிப் பரிமாற்றங்களை முடக்கி, அந்நாட்டின் இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும் எனவும் Scott Bessent
தெளிவுபடுத்தியுள்ளார்.

அதேவேளை தமது நாடுமீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும் என ஈரான் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றது.

போர் நிறுத்தத்துக்காக முன்வைக்கப்படும் நிபந்தனைகளில் இது பிரதான விடயமாகும்.

இந்நிலையில் தடைகளை தீவிரப்படுத்துமாறு அமெரிக்கா தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!