பாகிஸ்தான் ஊடாக ஈரானின் புதிய திட்டம் முன்வைப்பு!
போர் சூழலை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் ஒரு புதிய முன்மொழிவை பாகிஸ்தான் ஊடாக சமர்ப்பித்துள்ளது என தெரியவருகின்றது.
ஈரானின் Tasnim செய்தி நிறுவனம் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது.
போர் சூழலை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் ஒரு புதிய முன்மொழிவை பாகிஸ்தான் வழியாக சமர்ப்பித்துள்ளது.
புதிய திட்டம் பதினான்கு முக்கிய அம்சங்களைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்துவதையும் அமைதியை நிலைநாட்டுவதையும் இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் தனது ஈரானியப் பயணத்தை மூன்று நாட்களுக்கு நீட்டித்துள்ள நிலையில் இந்த முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.




