இன்றைய முக்கிய செய்திகள்

அமெரிக்கா – பாகிஸ்தான் நெருக்கம் – சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த ட்ரம்ப்பின் நகர்வு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிகாரத்திற்கு வந்த பின்னர், பாகிஸ்தானுடன் உள்ள நட்புறவை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் உலக அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளன.

சர்வதேச நிதி நிறுவனங்களின் உதவிகளை பாகிஸ்தான் எளிதாகப் பெறும் வகையில், அமெரிக்கா திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானின் எண்ணெய் வளங்களை மேம்படுத்த உதவுவோம் என டிரம்ப் ஆட்சியாளர்கள் கூறியதும், இந்த நெருக்கம் மீதான சந்தேகங்களைத் தூண்டியுள்ளது.

இதற்கெல்லாம் சிகரமாக, பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஜெனரல் அசிம் முனீர் வெள்ளை மாளிகைக்கு நேரடியாக அழைக்கப்பட்டு விருந்து அளிக்கப்பட்டது, உலக அரசியல் வட்டங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் சீனா மிகப்பெரிய முதலீடுகளை செய்துள்ள நிலையிலும், டிரம்ப்பின் இந்த அணுகுமுறை புதிய சக்திநிலைகளை உருவாக்கக்கூடியது என மதிப்பீடுகள் வெளிவந்துள்ளன.

இந்நிலையில், ஒரு பிரபல பத்திரிகையில் அமெரிக்கா–பாகிஸ்தான் உறவுகள் குறித்து விரிவான கட்டுரை வெளியாகியுள்ளது. அதில்,

இந்த புதிய நெருக்கம் இந்தியா மற்றும் சீனாவையே மட்டுமல்லாமல், மத்திய கிழக்கு அரசியலையும் பாதிக்கக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச உறவுகள் குறித்த மையம் என்ற சீனாவின் ஒரு ஆய்வு நிறுவனம், பாகிஸ்தான் அமெரிக்க நட்புக்காக சீனாவை புறக்கணிக்கமாட்டாது எனத் தெரிவித்துள்ளது.

மேலும், தெற்காசிய பொருளாதார விவரங்களுக்கான மையத்தின் நிபுணர்,

“அமெரிக்கா – பாகிஸ்தான் நட்பு என்பது தற்காலிகம் மட்டுமே. இது பாகிஸ்தான் – சீனா உறவை பாதிக்க முடியாது, ஏனெனில் அந்த உறவு வலுவான அடித்தளத்தைக் கொண்டது” எனக் கூறியுள்ளார்.

SR

About Author

You may also like

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கைக்கு இந்தியா வழங்கிய மகிழ்ச்சியான செய்தி – 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

  • October 5, 2024
இலங்கைக்கு 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை இந்தியா வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன், இந்திய
இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

2 வாரங்களை சிறப்பாக பயன்படுத்திய அனுரகுமார – எரிக்சொல்ஹெய்ம் பாராட்டு

  • October 5, 2024
இலங்கைக்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்கவேண்டும் என இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார தெரிவு செய்யப்பட்டு இரண்டு வாரங்களாகின்றன