இலங்கை செய்தி

பிரசன்ன ரணதுங்க மற்றும் சரத் வீரசேகரவிற்கு விசா வழங்க மறுத்துள்ள அமெரிக்கா

ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ஆகியோருக்கு விசா வழங்குவது கடினம் என இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் துறை கண்காணிப்புக் குழுவின் தலைவர்களின் பயிலரங்கில் பங்கேற்க ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் இந்த இருவரையும் பரிந்துரைத்திருந்தது.

எனினும், விசா நிராகரிக்கப்பட்டதையடுத்து, இருவரும் அமெரிக்க பயணத்தை ரத்து செய்துள்ளனர்.

குறித்த குழுவின் தலைவராக அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு எதிரான வழக்கு காரணமாக அமெரிக்க விசா மறுக்கப்பட்டுள்ளதுடன், யுத்த காலத்தில் சரத் வீரசேகரவின் செயற்பாடுகள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் காரணமாக அவரது விசா நிராகரிக்கப்பட்டுள்ளது.

(Visited 7 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content