இலங்கை செய்தி

ஐ.நா. பிரதிநிதியுடன் தமிழ்த் தேசிய பேரவையினர் சந்திப்பு!

இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி மார்க் அண்ட்ரே பிரான்ச் மற்றும் தமிழ்த் தேசியப் பேரவையின் பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

கடந்த ஒரு வாரகாலமாக வடக்கு மாகாணத்தில் தங்கியிருந்து பல்வேறு தரப்பினருடனும் சந்திப்புகளை மேற்கொண்டு வரும் ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி, இன்று காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை தமிழ்த் தேசியப் பேரவையின் உறுப்பினர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

யாழ்ப்பாணம் – தாவடிப் பகுதியில் அமைந்துள்ள ‘பொக்ஸ்’ விருந்தினர் விடுதியில் இச்சந்திப்பு நடைபெற்றது.

தமிழ்த் தேசியப் பேரவை சார்பில் செல்வராசா கஜேந்திரன், பொ.ஐங்கரநேசன் , தருமலிங்கம் சுரேஷ் , நடராஜர் காண்டீபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பின் போது வடக்கின் தற்போதைய நிலைமைகள் மற்றும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் முக்கிய விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டன என்று தெரியவருகிறது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை