ஹார்முஸ் நீரிணை முழுமையாக திறப்பு, ஈரானுக்கு எதிரான முற்றுகை தொடரும் – ட்ரம்ப்
ஹார்முஸ் நீரிணை முழுமையாக திறக்கப்பட்டு வர்த்தகத்துக்கு தயாராக உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அவர் தனது ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் வெளியிட்ட பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஈரானுடன் அமெரிக்காவின் வர்த்தக விவகாரம் முழுமையாக முடிவடையும் வரை, ஈரானை இலக்குவைத்த கடற்படை முற்றுகை தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பெரும்பாலான விடயங்கள் ஏற்கனவே பேச்சுவார்த்தையில் தீர்க்கப்பட்டுவிட்டதாகவும், இந்த செயன்முறை விரைவாக நிறைவடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





