உலகம் செய்தி

சீன ஜனாதிபதியுடனான சந்திப்பை உறுதிப்படுத்தினார் ட்ரம்ப்!

ஹார்முஸ் நீரிணை மீள திறக்கப்பட்டமை தொடர்பில் சீன ஜனாதிபதி Xi Jinping மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் மே 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் சீனாவில் நடைபெறவுள்ள அந்நாட்டு ஜனாதிபதியுடனான சந்திப்பு சிறப்பானதாகவும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அமையும் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானில் கச்சா எண்ணெய் கொள்வனவு செய்யும் மிகப்பெரிய நாடான சீனா, தனது தேவைக்கான எண்ணெயில் சுமார் 38 சதவீதத்தை ஹோர்முஸ் நீரிணை வழியாகவே பெற்றுவருகின்றது.

எனவே, ஹார்முஸ் நீரிணை மீள திறக்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் சீனாவும் உரிய ராஜதந்திர நுட்பங்களை கையாண்டு வந்தது.

இந்நிலையிலேயே குறித்த நீரிணை மீள திறக்கப்பட்டமை தொடர்பில் சீன ஜனாதிபதி மகிழ்ச்சியடைவார் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!