உலகம் செய்தி

வான்பரப்பை மீண்டும் திறந்தது ஈரான்!

சர்வதேச விமான போக்குவரத்துக்காக தமது வான்பரப்பை ஈரான் மீண்டும் திறந்துள்ளது என அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை காரணமாக கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி வான் பரப்பை ஈரான் மூடியது.

பாதுகாப்பு கருதி இவ்வாறு மூடப்பட்டிருந்த வான்வழிப் பாதைகள், தற்போது பகுதி அளவில் செயல்பாட்டிற்கு வந்துள்ளன.

குறிப்பாக, ஈரானின் கிழக்குப் பகுதியில் உள்ள வான்வழிப் பாதைகள் மற்றும் சில முக்கிய விமான நிலையங்கள் வழியாகப் பயணங்கள் படிப்படியாகத் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் அறிவிப்பின்படி, இன்று காலை முதல் சர்வதேச விமானங்கள் இந்த வழித்தடங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!