உலகம் செய்தி

ஈரான்மீதான ராணுவ தாக்குதல் திட்டத்தை இடைநிறுத்தினார் ட்ரம்ப்!

ஈரான்மீதான அமெரிக்காவின் புதிய ராணுவ நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வளைகுடா நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க, அமைதிப் பேச்சுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கிலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஈரான் தனது அணுசக்தித் திட்டங்களைக் கைவிட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்திவருகின்றது.

மறுபுறத்தில் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க வேண்டுமென ஈரான் கோரிக்கை விடுத்துவருகின்றது.

இந்நிலையில் அமைதி பேச்சு முயற்சிகள் தோல்வியடைந்தால், ஈரானுக்கு எதிராக உடனடித் தாக்குதல் நடத்த அமெரிக்க இராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!