உலகம் செய்தி

அமெரிக்காவின் கருவூலத்துறைக்கு எதிராக வழக்கு தொடர்ந்த ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க உள்நாட்டு வருவாய் சேவை (IRS) மற்றும் கருவூலத் துறைக்கு எதிராக நேற்று வழக்குத் தொடர்ந்துள்ளார்.

தனது முதல் பதவிக் காலத்தில் தனது வரி வருமானம் சட்டவிரோதமாக ஊடகங்களுக்கு கசியவிடப்பட்டதாகக் கூறியே இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.

புளோரிடாவில் உள்ள ஒரு கூட்டாட்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கின் மூலம் அவர் 10  பில்லியன் டொலருக்கும் அதிகமான இழப்பீடு கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

டொனால்ட் ட்ரம்ப் தனது மகன்களான டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர் மற்றும் எரிக் ட்ரம்ப் ஆகியோருடன் சேர்ந்து இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

மேலும் அவர் ஜனாதிபதியாக அல்லாமல் தனது தனிப்பட்ட திறனில் இந்த வழக்கைத் தாக்கல் செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தின் காரணமாக லிட்டில்ஜான் பணிபுரிந்த தனியார் நிறுவனத்துடனான 21 மில்லியன் டொலர் மதிப்புள்ள ஒப்பந்தங்களை ரத்து செய்ய அமெரிக்க அரசாங்கம் முன்னர் நடவடிக்கை எடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி