ஐரோப்பா

பிரான்ஸில் குழு மோதலினால் ஏற்பட்ட விபரீதம் – கொலை செய்யப்பட்ட நபர்

பிரான்ஸில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை Bobigny (Seine-Saint-Denis) நகரின் rue de Paris வீதியில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

காலை 9.30 மணி அளவில் பல்வேறு நபர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு பொலிஸ் அதிகாரிகள் சென்றடைந்த போது மோதலில் ஈடுபட்டிருந்தவர்கள் பலர் தப்பி ஓடியிருந்தார்கள்.

இச்சம்பவத்தில் 40 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

தாக்குதலாளி ஒருவர் வாகனம் மூலம் குறித்த நபரை மோதி தள்ளியதாக அறிய முடிகிறது.

மருத்துவமனைக்கு கொண்டு சென்ற வழியில் குறித்த நபர் பலியாகியிருந்தார். மேற்படி சம்பவம் தொடர்பில் Seine-Saint-Denis நகர பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content