இந்தியா

கழிவறையில் சடலமாக கிடந்த இளம் நடிகர்!

பிரபல இளம் நடிகரும், மொடலுமான ஆதித்யா சிங் ராஜ்புத் தனது வீட்டின் கழிவறையில் இறந்துகிடந்தது இந்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர், மொடல் மற்றும் நடிகர் தேர்வு ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்தவர் ஆதித்யா சிங் ராஜ்புத் (32). 2008ஆம் ஆண்டில் ஆதி கிங் படத்தில் அறிமுகமான இவர் தொலைக்காட்சி தொடர், நிகழ்ச்சிகளில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், மும்பையின் அந்தேரி பகுதியில் அவர் வசித்து வந்த 11வது மாடியில் உள்ள கழிவறையில் ஆதித்யா சடலமாக கிடந்தார். அவரது நண்பர் இதனை முதலில் அறிந்து, காவலாளியுடன் சேர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.ஆனால், அவர் பாதி வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இளம் நடிகரின் இந்த மரணம் இந்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கழிவறையில் சடலமாக கிடந்த இளம் நடிகர்! திரையுலகினர் அதிர்ச்சி - லங்காசிறி நியூஸ்

அவர் போதைப்பொருளை அதிகமாக உட்கொண்டதன் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் ஆதித்யாவின் நண்பர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தன்னுடைய நண்பர்களுடன் வெளியே சென்ற ஆதித்யா, அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 3 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content