இலங்கை

பறிபோகும் அரச பணியாளர்களின் வேலை!

பாரிய அளவிலான அரச பணியாளர்களை சேவையில் இருந்து நீக்க முன்மொழியப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

மொனராகலை மாவட்ட செயலக பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  “சர்வதேச அளவில் வங்கி பரிவர்த்தனைகள் நின்றுவிட்டதை மறந்துவிடாதீர்கள். இப்படி ஒரு சர்வதேசப் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருப்பதை அனைவரும் புரிந்து கொள்வது கடினமாக இருந்தாலும்  ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த நாட்டின் மிகக் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணத்தை நிறுத்த முடியாது. மோதலைத் தொடங்க இதுவே சிறந்த நேரம் என்று சிலர் நினைக்கலாம்.

மோதலை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை. மனிதாபிமானத்துடன் சிந்திக்க வேண்டும். நமது நாட்டின் மிகக் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு இந்த நிவாரணத்தை விரைவாக வழங்கவும்,  தொகையை அதிகரிக்கவும் இது ஒரு முயற்சியாக செய்யப்படுகிறது.

தற்போதுள்ள பிரச்சினைகளை தீர்த்து இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கான பொறுப்பை அரச அதிகாரிகள் என்ற வகையில் நிறைவேற்றுங்கள். ஏராளமான அரச ஊழியர்களை விடுவிக்கவும்இ நீக்கவும் பல்வேறு திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. நாங்கள் அதை செய்யவில்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்