பொழுதுபோக்கு

சிம்புவால் தலையை பிச்சுக்கும் ஆண்டவர்… கை கொடுத்தார் கேஜிஎஃப் பிரபலம்

சிம்பு கமல் கூட்டணியில் தேசிங்கு பெரியசாமி இயக்கும் STR48 (எஸ் டி ஆர் – 48) படத்தின் அறிவிப்பு வெளிவந்து மாத கணக்காகிவிட்டது.

ஆனால் படம் ஆரம்பிப்பதற்கான அறிகுறி தான் தென்படவே இல்லை. இதற்கிடையில் ஐசரி கணேஷ் உடன் இருந்த கருத்து வேறுபாடு, ரெட் கார்டு, கோர்ட், கேஸ் என்று சிம்புவின் பெயர் மொத்தமாக டேமேஜ் ஆனது. இருந்தாலும் பிரச்சனை எல்லாம் முடியட்டும் என்று கமல் காத்திருந்தார்.

தற்போது அனைத்தும் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்த நிலையில் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க வேண்டும் என்று அணுகி இருக்கின்றனர். ஆனால் அவரோ நீங்கள் 100 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தால் கூட சிம்பு இருக்கும் பக்கம் தலை வைத்து கூட படுக்க மாட்டேன் என்று மறுத்து விட்டாராம்.

இது என்ன புது குழப்பம் என்று பார்த்தால் எல்லாம் பழைய விவகாரம் தானாம். பல வருடங்களுக்கு முன்பு பீப் சாங் பிரச்சனையில் சிம்புவுடன் சேர்ந்து அனிருத்தின் பெயரும் சின்னாபின்னமானது. அதிலிருந்தே இவர்களுடைய நட்பும் உடைந்து போனது.

இந்த காரணத்தினால் தான் அனிருத் இப்போது கமல் படம் என்று தெரிந்தும் கூட இசையமைக்க மறுத்துவிட்டாராம். இப்படி நாலா பக்கமும் சிம்புவால் வரும் குடைச்சலால் ஆண்டவர்தான் பாவம் தலையை பிச்சுக்காத குறையாக இருக்கிறாராம். இருப்பினும் தற்போது அவர் கேஜிஎஃப் பிரபலத்தையே வளைத்து போட்டு விட்டார்.

அந்த வகையில் அப்படத்திற்கு இசையமைத்த ரவி பாசூரை தான் கமல் பல கோடி சம்பளம் கொடுத்து கமிட் செய்திருக்கிறார். இதுதான் இப்போது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. ஆக மொத்தம் அனிருத் மறுத்தாலும் கேஜிஎஃப் இசையமைப்பாளர் கை கொடுத்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் தூண்டி இருக்கிறது.

 

(Visited 1 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content