ஐரோப்பா

பிரான்ஸில் படகு ஒன்று கடலில் மூழ்கியதில் அகதி ஒருவருக்கு நேர்ந்த கதி

பிரான்ஸில் படகு ஒன்று கடலில் மூழ்கியதில் அகதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பிரான்ஸில் இருந்து அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்றே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

வியாழக்கிழமை இரவு இச்சம்பவம் Nord மாவட்டத்தின் கடலில் இடம்பெற்றுள்ளது.

66 அகதிகளை ஏற்றிக்கொண்டு பிரித்தானியா நோக்கி பயணித்த படகு ஒன்று திடீரென மூழ்க ஆரம்பித்துள்ளது.

உடனடியாக அங்கிருந்து கடற்பிராந்தியத்தை கண்காணிக்கும் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நள்ளிரவு அளவில் அகதிகள் படகில் இருந்தவர்கள் மீட்கப்பட்டனர். Grand Fort Philippe துறைமுகத்தில் இருந்து எட்டு கிலோமீற்றர் தொலைவில் கடலில் மூழ்கத்தொடங்கிய அனைவரையும் கடற்படையினர் மீட்டனர்.

ஆனால் துரதிஷ்ட்டமாக அகதி ஒருவர் நீரில் மூழ்கி மூச்சுத்திணறலுக்கு உள்ளாகியிருந்தார்.

இந்த நிலையில், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனாலும் அவரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. அகதி பலியானதாக அறிவிக்கப்பட்டார்.

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content