பொழுதுபோக்கு

புத்தாண்டு பார்ட்டியில் நடிகையை விருந்தாக்கிக்கொண்ட நடிகர்… இறுதியில் அதிர்ச்சி

புத்தாண்டை ஒட்டி நடந்த விருந்து ஒன்றில் நடிகையை நடிகர் விருந்தாக்கிவிட்டதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. தற்போது இந்த கிசுகிசுதான் சினிமா வட்டாரத்தில் ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருக்கிறத்.

மேலும் அந்த நடிகர் திருந்தவேமாட்டாரா என்றும் திரைத்துறையினர் தங்களுக்குள் பேசிவருகின்றனர்.

ஆங்கில புத்தாண்டு என்றாலே சிட்டியிலிருந்து, கிராமம்வரை பார்ட்டிகள் களைகட்டும். அதிலும் திரைத்துறையில் அந்த பார்ட்டி படு ஜோராக நடக்கும்.

நடிகர்கள், நடிகைகள் இங்கு கொண்டாடுவது மட்டுமின்றி வெளிநாடு சென்றும் கொண்டாட்டங்களை நிகழ்த்திக்கொள்வார்கள். அப்படித்தான் 2024ஆம் ஆண்டு பிறந்ததையொட்டி சென்னையில் பிரபல ஹோட்டலில் அந்த நடிகர் பார்ட்டி ஒன்றை வைத்திருக்கிறார்.

அந்த நடிகர் பார்ட்டிக்கு பெயர் போனவர். சாதாரண நாளிலேயே பார்ட்டி மோடில் இருக்கும் அந்த நடிகருக்கு புத்தாண்டு என்றால் சொல்லவா வேண்டும். அப்படித்தான் இந்த முறையும் பெரிய பார்ட்டிக்கு அரேஞ்ச் செய்தார்.

அதில் தனக்கு நெருக்கமானவர்கள், நண்பர்கள் என பலரையும் கலந்துகொள்ள அழைப்பு விடுத்து விதவிதமான மது பானங்கள், வெரைட்டியான சாப்பாடு, ஆட்டம் பாட்டம் என ரகளை கட்டி அடித்திருக்கிறார்.

இந்த பார்ட்டியில் தன்னுடன் நடித்து வரும் நடிகையையும் அழைத்திருக்கிறார். அந்த நடிகை சினிமாவில் அறிமுகமாகி சில வருடங்கள்தான் ஆகின்றன. எனவே அவரும் சினிமா பார்ட்டி என்பதால் பெரும் எதிர்பார்ப்போடு அங்கு சென்றிருக்கிறார்.

சென்றவர் எதிர்பார்த்தபடியே ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டாராம். ஏனெனில் பெரிய பெரிய தலைகள் எல்லாம் அந்த பார்ட்டியில் சங்கமித்ததை சந்தோஷத்தோடு அனுபவித்திருக்கிறார் நடிகை.

நடிகையிடம் மதுபானம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவரும் பார்ட்டிதானே என்று ஆரம்பத்தில் அளவாக மது எடுக்க ஆரம்பித்தாராம். சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்ததால் மதுவின் அளவு நேரம் செல்ல செல்ல கூடிக்கொண்டே போயிருக்கிறது. நள்ளிரவை தாண்டி பார்ட்டி சென்றபோது சிலர் உச்ச போதையில் அங்கிருந்து கிளம்பிவிட்டார்கள்.

நடிகரோ நடிகையிடம் கூடுதலாகவே நேரம் செலவழித்தாராம். ஒருவழியாக பேசி பேசியே நடிகையை கவிழ்த்துவிட்ட நடிகர் ஹோட்டலில் எப்போதும் தன்னுடைய பெயரில் புக்கிங்கில் இருக்கும் ரூமுக்கு அழைத்து சென்றுவிட்டார்.

போதையில் இருந்த நடிகை நிதானம் இழக்க நடிகரோ அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனக்கு தேவையானதை நிறைவேற்றிக்கொண்டாராம். நடிகையும் மயக்கத்தில் இருந்ததால் பெரிதாக கண்டுகொள்ளவில்லையாம்.

காலை விடிந்ததும் தன்னுடைய கோலத்தை பார்த்து நடிகைக்கு உச்சக்கட்ட அதிர்ச்சியாகிவிட்டதாம். நடிகரோ நடிகை விழித்துக்கொள்வதற்கு முன்னதாகவே இடத்தை காலி செய்துவிட; நடிகருக்கு ஃபோன் போட்டு திட்டி தீர்த்து; அழுது புலம்பிவிட்டாராம் நடிகை.

அவரை சமாதனம் செய்யும் விதமாக இனி தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்பு தருகிறேன். இந்த விஷயத்தை அப்படியே விட்டுவிடு என்று சொல்ல; நடிகையும் வேறு வழியில்லாமல் அமைதியாகிவிட்டாராம். இந்த தகவல்தான் தற்போது கோலிவுட்டில் டாக் ஆஃப் தி டவுனாக இருக்கிறது. அதுமட்டுமின்றி இந்த நடிகருக்கு இதே வேலையா போச்சே என்ற குரல்களும் கேட்க ஆரம்பித்திருக்கின்றன.

(Visited 6 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content