இந்தியா

கர்நாடகாவில் பயங்கரம்… அக்காவை துரத்தி துரத்தி சுத்தியலால் அடித்துக் கொலை செய்த தம்பி !

கர்நாடகாவில் மனநலம் பாதிக்கப்பட்டவர், தனது சகோதரியை ஓட ஓட விரட்டி சுத்தியலால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், யாதகிரி மாவட்டம் பொம்மரலதொட்டியைச் சேர்ந்தவர் நரசம்மா(65). இவரது சகோதர் சுகுரப்பா. மனநலம் பாதிக்கப்பட்ட சுகுரப்பாவை அவரது சகோதரி நரசம்மா கவனித்து வந்தார். இதற்காக வீட்டில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், சுகுரப்பா கவனித்துக் கொள்ளப்பட்டார்.

இந்த நிலையில், இன்று காலை சுகுரப்பா கை, கால்களில் கட்டப்பட்டிருந்த சங்கிலியை வீட்டில் இருந்த சுத்தியால் அடித்து உடைத்தார். அப்போது இதைத் தடுக்க முயன்ற அவரது மனைவி மற்றும் அவரது சகோதரி நரசம்மாவை இரும்பு சுத்தியலால் தாக்கினார். இதனால் நரசம்மா, அவரிடமிருந்து தப்பி வீட்டை விட்டு வெளியே ஓடினார்.

நாடளாவிய ரீதியில் 1,017 பேர் கைது! – Athavan News

ஆனால், விடாமல் அவரை தெருவில் துரத்திச் சென்ற சுகுரப்பா, நடுரோட்டில் வைத்து தலையில் சுத்தியலால் சரமாரியாக தாக்கினார். இதனால் ரத்த வெள்ளத்தில் நடுரோட்டிலேயே நரசம்மா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சைதாப்பூர் பொலிஸார், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினார்.

அப்போது மனநலம் பாதிக்கப்பட்ட சுகுரப்பா, அவரது சகோதரி நரசம்மாவை சுத்தியலால் அடித்துக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து கொலை செய்யப்பட்ட நரசம்மா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார், வழக்குப் பதிவு செய்து சுகுரப்பாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடுரோட்டில் மூதாட்டியை சுத்தியலால் அவரது சகோதரர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 5 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content