கஸ்ஸப தேரர் உட்பட 10 பேருக்கு நிபந்தனையுடன் பிணை!
திருகோணமலை- கடற்கரையில் கடல் பாதுகாப்பு சட்டத்தை மீறி சட்டவிரோத கட்டுமானம் அமைத்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 4 தேரர்கள் உட்பட 10 பேருக்கும் திருகோணமலை மேல் நீதிமன்றம் (11) பிணை வழங்கியுள்ளது. இவ்வழக்கு நீதவான் நீதிமன்றில் முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டதுடன் தொடர்ந்து எதிராளிகளுக்கான பிணை கோரிக்கைக்கான மனு தொடர்பான விசாரணை திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது இதனை அடுத்து 10 எதிராளிகளையும் பிணையில் விடுப்பதற்கான உத்தரவினை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் வழங்கினார். இதன்படி மீளவும் […]












