செய்தி

ஈரானில் 40 நாட்கள் துக்கம் அனுஷ்டிப்பு!

  • March 1, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலில் தமது நாட்டு உச்ச கமேனி தலைவர் கொல்லப்பட்டுள்ளார் என்பதை ஈரான் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கமைய ஈரானின் 40 நாள்கள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. ஏழு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கமேனியின் மகன், மருமகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் மேற்படி தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். ஈரான்மீதான கூட்டு போர் நடவடிக்கையால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை செய்தி

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக வடக்கு, கிழக்கில் போராட்டம்!

  • February 28, 2026
  • 0 Comments

“பழசும் வேண்டாம், புதுசும் வேண்டாம்” எனும் முழக்கத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ‘தாயக செயலணி’ அமைப்பின் ஏற்பாட்டில் இந்த எழுச்சிப் போராட்டங்கள் நடைபெற்றன. யாழ்ப்பாணம் பொது நூலகத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், அங்கிருந்து பேரணியாக வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் வரை சென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சிவில் அமைப்பினர், கல்விச் சமூகத்தினர் […]

செய்தி

யாழ்.நகரில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்: நீதவான் வழங்கியுள்ள உத்தரவு!

  • February 28, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் நகர் மத்தியில் மீட்கப்பட்ட கரு தொடர்பில் கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு யாழ் . நீதவான் லெனின்குமார் பொலிஸாருக்கு பணித்துள்ளார். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக பெண்ணொருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய பின்னர் அங்கிருந்து காணாமல் போயிருந்தார். அதன் பின்னர் அப்பகுதியில் சுமார் 6- 7 மாத கரு வீதியில் காணப்பட்டுள்ளது. அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கருவினை கடதாசி பெட்டியால் […]

இந்தியா தமிழ்நாடு

பா.ஜ.கவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது: வைகோ திட்டவட்டம்!

  • February 28, 2026
  • 0 Comments

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ம.தி.மு.க. தனிச்சின்னத்தில்தான் போட்டியிடும் என்று MDMK அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ Vaiko தெரிவித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வருடன் இன்று (28) நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். “ தமிழக முதல்வரிடம் மூன்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதற்கு சாதகமான பதில் கிடைக்கப்பெற்றது. தொகுதிப் பங்கீடு பற்றி முதல்வரிடம் எதுவும் பேசவில்லை. தொகுதிப் பங்கீடு குறித்து ம.தி.மு.க. குழு முதற ;சுற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. மீண்டும் […]

செய்தி

காதலுக்கு போர்க்கொடி: துணி வியாபாரி ஆணவக்கொலை! ஆந்திராவில் பயங்கரம்!!

  • February 28, 2026
  • 0 Comments

காதல் திருமணம் செய்த துணி வியாபாரி கொடூரமாக ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் இந்தியா, ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தேக நபர்களை மக்கள் நையப்புடைத்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். ஆந்திர மாநிலம் அம்பேத்கார் கோனசீமா மாவட்டம் வேம்பள்ளியை சேர்ந்தவரான 41 வயதான சூரிய பிர காஷ் துணி வியாபாரம் செய்பவர். மேடபாடு கிராமத்தைச் சேர்ந்த சந்தியா, ராயவரத்தில் துணை தாசில்தாராக பணியாற்றி வருகிறார். இருவரும் ஒரே பாடசாலையில் பயின்றுள்ளனர். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த அவர்கள் காதலித்து வந்தனர். இந்த […]

ஆஸ்திரேலியா உலகம்

மத்திய கிழக்கை சூழ்ந்த போர் மேகம்: உலக நாடுகள் உஷார்!

  • February 28, 2026
  • 0 Comments

ஈரான்மீதான தாக்குதலையடுத்து மத்திய கிழக்கில் உள்ள தமது நாட்டு பிரஜைகளுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளன. ஈரான், இஸ்ரேல் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளில் உள்ள தமது பிரஜைகளை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு ஆஸ்திரேலியா அறிவுறுத்தியுள்ளது. வுணிக விமானங்கள் கிடைக்கும்போதே அங்கிருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வான்வழித் தாக்குதல்கள் மற்றும் வான்வெளி மூடப்படுவதால் ஏற்படக்கூடிய விமானப் போக்குவரத்து இடையூறுகள் குறித்து ஆஸ்திரேலியா கவலை வெளியிட்டுள்ளது. பிராந்தியத்தில் நிலவும் நிலையற்ற பாதுகாப்பு சூழல் காரணமாக அத்தியாவசியப் பொருட்களைச் […]

உலகம்

ஈரான் பதிலடி! அவசரநிலை பிரகடனம்!!

  • February 28, 2026
  • 0 Comments

இஸ்ரேல்மீது பதில் தாக்குதலை ஈரான் ஆரம்பித்துள்ளது. முன்னாயத்த நடவடிக்கையாக இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்பு ஈரான் ஏவுகணைகளைத் தடுத்து அழித்துவருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க படைதளங்கள்மீதும் ஈரான் தாக்குதல் நடத்தலாம் எனக் கூறப்படுகின்றது. எனினும், அங்கிருந்து தமது படைகளை அமெரிக்கா ஏற்கனவே வெளியேற்றியுள்ளது எனவும் கூறப்படுகின்றது. அதேவேளை, தமது நாட்டின் உச்ச தலைவரும், ஜனாதிபதியும் பாதுகாப்பாக உள்ளனர் என ஈரான் தெரிவித்துள்ளது. மேற்படி […]

உலகம்

ஈரானுக்கு முடிவுகட்டப்படும்: ட்ரம்ப் சூளுரை!

  • February 28, 2026
  • 0 Comments

“ஈரான் நாட்டின் ஏவுகணைகள் அனைத்தையும் நிர்மூலமாக்குவோம்.” – என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டர்ம்ப் சூளுரைத்துள்ளார். ஈரான்மீது அமெரிக்காவும்,இஸ்ரேலும் கூட்டு தாக்குதலை முன்னெடுத்துவரும் நிலையிலேயே ட்ரம்ப் இவ்வாறு சூளுரைத்துள்ளார். ஈரான் ஜனாதிபதி அலுவலகம், உச்சத் தலைவரின் வளாகம், புலனாய்வு அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம், அணுசக்தி நிறுவனம் உள்ளிட்டவைகளை குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தி வருவதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ அமெரிக்கர்களை பாதுகாப்பதே எங்களின் நோக்கம். ஈரான் எப்போதும் அணு […]

அரசியல் இலங்கை செய்தி

ஜே.வி.பியினர் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்லர்: டில்வின் சில்வா தெரிவிப்பு!

  • February 28, 2026
  • 0 Comments

“ஜே.வி.பியினர் JVP இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்லர். அப்போதைய இந்திய அரசாங்கத்தை மட்டுமே எதிர்த்தோம்.” என்று ஜே.வி.பியின் பொதுச்செயலர் டில்வின் சில்வா tilvin silva தெரிவித்தார். இந்திய வியாப்தவாதத்துக்கு எதிராக அன்று செயல்பட்ட ஜே.வி.பி, இன்று அந்நாட்டின் தேவைக்கேற்ப செயல்படுகின்றது என சில எதிரணிகள் குற்றஞ்சாட்டிவருகின்றன. ஜே.வி.பி. செயலாளரின் அண்மைய இந்திய விஜயத்தைக்கூட கடுமையாக விமர்சித்துவந்தன. இந்திய விரோத நிலையில் இருந்த உங்கள் கட்சி, தலைகீழாக மாறி, இந்தியாவுடன் மிக நெருக்கமாக இருக்கத் தீர்மானித்துள்ளதாக பரவலாகக் கூறப்படுகிறதே என […]

இலங்கை செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பிரதான சூத்திரதாரிக்காக மொட்டு கட்சி காத்திருப்பு!

  • February 28, 2026
  • 0 Comments

“எமது ஆட்சியின்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி சர்வதேசம்வரை சென்ற பேராயர் தற்போது மௌனம் காப்பது ஏன்? பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிக்க கோரி அவர் வீதியில் இறங்காமல் இருப்பது ஏன்?” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி Tissa Kuttiyarachchi கேள்வி எழுப்பினார். “உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியால் நடத்தப்பட்டது என்பதுபோலவே காண்பிப்பதற்கு கடந்த காலங்களில் தகவல் […]

error: Content is protected !!