இந்தியா செய்தி

பதவி துறக்கிறார் பிஹார் மாநில முதல்வர்!

பிஹார் Bihar மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் Nitish Kumar விரைவில் பதவி துறக்க உள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

மாநிலங்களவை Rajya Sabha தேர்தலில் போட்டியிடும் நோக்கிலேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.

நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில் பிஹாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 2 இடங்களில் வெற்றி பெறும் சாத்தியம் பிரகாசமாக உள்ளது.

இதில் ஒரு தொகுதியில் மத்திய அமைச்சர் ராம்நாத் தாக்கூர் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. மற்றைய தொகுதியிலேயே நிதிஷ் குமார் போட்டியிடுவார் எனக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் நிதிஷ் குமார் முதல்வர் பதவியிலிருந்து விலகவுள்ளார்.

அவரது மகன் நிஷாந்த் குமார் துணை முதல்வராகப் பொறுப்பேற்பார் எனவும் பா.ஜ.கவை சேர்ந்த ஒருவர் அடுத்த முதல்வராக பதவியேற்பார் எனவும் தெரியவருகின்றது.

இது தொடர்பில் பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதா தள உயர்மட்ட தலைவர்கள் மத்தியில் கலந்துரையாடல் இடம்பெற்றுவருகின்றது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!