இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக எதிர்வரும் 8ஆம் திகதி கொழும்பு வரவுள்ளார். இலங்கை செய்தி

08 ஆம் திகதி இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்

  • September 5, 2026
  • 0 Comments

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக எதிர்வரும் 8ஆம் திகதி கொழும்பு வரவுள்ளார். இந்தப் பயணத்தின் போது, ​​இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் குறித்து இலங்கை தலைவர்களுடன் அவர் விரிவான கலந்துரையாடல்களை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 9 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோரை இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திக்கவுள்ளார். […]

உலகளாவிய உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் , 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதிக்குப் பிந்தைய மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

போர், மோசமான வானிலையால் உலகளவில் உச்சம் தொட்ட உணவுப் பொருட்களின் விலை

  • September 4, 2026
  • 0 Comments

உலகளாவிய உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் , 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதிக்குப் பிந்தைய மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. மோசமான வானிலை மாற்றம் மற்றும் கருங்கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் இடையூறுகள் காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விநியோகத்தில் அச்சம் ஏற்பட்டுள்ளதாலேயே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் வர்த்தகம் செய்யப்படும் உணவுப் பொருட்களின் மாதாந்த விலை மாற்றங்களைக் கண்காணிக்கும் ஐ.நா.வின் […]

பிரித்தானியாவின் தீவிர வலதுசாரி Reform UK கட்சியின் தலைவரான நைஜல் பராக்கின் (Nigel Farage) இரு மூத்த உதவியாளர்கள் வெள்ளிக்கிழமை தமது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். ஐரோப்பா செய்தி

Reform UK கட்சிக்கு நெருக்கடி: முக்கிய இரு பிரமுகர்கள் ராஜினாமா

  • September 4, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் தீவிர வலதுசாரி Reform UK கட்சியின் தலைவரான நைஜல் பராக்கின் (Nigel Farage) இரு மூத்த உதவியாளர்கள் வெள்ளிக்கிழமை தமது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். வெளிநாட்டு நன்கொடையாளர் ஒருவர் மூலம் அரசியல் கருத்துக்கணிப்புக்கான நிதியைப் பெற வழிவகை செய்து, நாட்டின் தேர்தல் சட்டத்தை இக்கட்சி மீறியுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட இரகசிய விசாரணையில் குற்றம் சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும், கட்சி எந்தவொரு தவறும் செய்யவில்லை என மறுத்துள்ளதோடு, காலநிலை மாற்ற ஆர்வலர்களால் முன்னெடுக்கப்பட்ட சதித்திட்டத்திற்கே (Hoax) […]

கச்சத்தீவு இலங்கைக்கே உரித்தானது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். செய்தி

கச்சத்தீவு இலங்கையின் சொத்து: தமிழக அரசியல்வாதிகளுக்கு அமைச்சர் பதிலடி

  • September 4, 2026
  • 0 Comments

கச்சத்தீவு இலங்கைக்கே உரித்தானது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (04) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கை அதிகாரிகள் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர். இந்தப் பயணம் கச்சத்தீவு தொடர்பில் விவாதிப்பதற்கானதல்ல. மாறாக, இரு நாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வரும் மீனவர் பிரச்சினைகள் உள்ளிட்ட நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில் […]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இலங்கை செய்தி

நாமல் ராஜபக்சவுக்கு விளக்கமறியல் உத்தரவு

  • September 4, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச, நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். போதரகம இந்த விளக்கமறியல் உத்தரவை வழங்கினார். லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டாரவின் சமர்ப்பணங்கள் மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை […]

இந்திய மத்திய அமைச்சரவை விரைவில் விரிவுபடுத்தப்பட உள்ளது என்றும், அப்போது வயதில் மூத்தவர்கள் பொறுப்புகளைக் குறைந்து இளம் தலைமுறையினருக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா செய்தி

இந்திய அமைச்சரவை நாளை மறுசீரமைப்பு? இளம் தலைமுறையை கவர வியூகம்!

  • September 4, 2026
  • 0 Comments

இந்திய மத்திய அமைச்சரவை விரைவில் விரிவுபடுத்தப்பட உள்ளது என்றும், அப்போது வயதில் மூத்தவர்கள் பொறுப்புகளைக் குறைந்து இளம் தலைமுறையினருக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், நீண்ட காலமாக தாமதப்படுத்தப்பட்டு வந்த மத்திய அமைச்சரவை விரிவாக்கம் முடிவுக்கு வருதாகத் தெரிகிறது. ஆகஸ்ட் 26-ல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் பேசிய பிரதமர், “அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய உறுப்பினர்களை சந்திப்போம்” எனக் கூறியதாகத் தெரிகிறது. முன்னதாக, […]

பெண் பயணி ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளித்த குற்றத்திற்காக, 'ஊபர்' (Uber) நிறுவனத்தின் முன்னாள் ஓட்டுநருக்கு 12 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

பெண் பயணிக்கு பாலியல் தொல்லை: Uber சாரதியின் குடியுரிமை விண்ணப்பத்தை நிராகரித்தது ஆஸ்திரேலியா

  • September 4, 2026
  • 0 Comments

பெண் பயணி ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளித்த குற்றத்திற்காக, ‘ஊபர்’ (Uber) நிறுவனத்தின் முன்னாள் ஓட்டுநருக்கு 12 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் பிராஸ்பெக்ட் (Prospect) பகுதியைச் சேர்ந்த முஹம்மது உஸைர் ஏசான் (35) Muhammad Uzair Ehsan என்பவருக்கு எதிராக, கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து, இரு பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என நீதிபதி ரோட்ரிக் ஜென்சன் தீர்ப்பளித்திருந்தார். இன்று அடிலெய்ட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தண்டனை […]

இலங்கை செய்தி

நாமல் ராஜபக்ச கைது

  • September 4, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, லஞ்ச – ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். சர்ச்சைக்குரிய ‘ஏர்பஸ்’ (Airbus) விமானக் கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகள் குறித்த வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்வதற்காக, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இன்று காலை அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எழுத்துப்பூர்வமாகப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கமைய இன்று (04) காலை ஆணைக்குழுவில் ஆஜரானார். சுமார் 5 மணித்தியாலங்களுக்கும் மேலாக அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதைத் […]

27-ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தான் இராணுவத்தின் உயர்மட்டக் கட்டளை அமைப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, அந்நாட்டின் மிக மூத்த இராணுவப் பதவியின் அதிகாரங்களை முதன்முறையாகச் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கும் சட்டமூலத்துக்கு பாகிஸ்தான் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பிரதமருக்கு அடுத்தப்படியாக பாதுகாப்பு பிரதானி: பாகிஸ்தானில் அதிரடி சட்டம்

  • September 4, 2026
  • 0 Comments

27-ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தான் இராணுவத்தின் உயர்மட்டக் கட்டளை அமைப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, அந்நாட்டின் மிக மூத்த இராணுவப் பதவியின் அதிகாரங்களை முதன்முறையாகச் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கும் சட்டமூலத்துக்கு பாகிஸ்தான் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 20 அன்று, பாகிஸ்தான் தேசிய பேரவை ‘பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் சட்டம் 2026’ மற்றும் ‘தேசிய கட்டளை அதிகாரி சட்டம் 2010’-க்கான திருத்தம் ஆகியவற்றை அங்கீகரித்தது. இவ்விரு சட்டங்களும் இணைந்து, கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட […]

மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிபெற்றார் இந்திய தூதுவர் இலங்கை செய்தி

மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிபெற்றார் இந்திய தூதுவர்

  • September 4, 2026
  • 0 Comments

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு, ஆசிகளைப் பெற்றுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான சகோதரத்துவ உறவை வலுப்படுத்த மகாநாயக்க தேரர்களுக்கு மரியாதை செலுத்தியதாகவும், அவர்களின் ஆசிகளைப் பெற்றதாகவும் இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா சமூக ஊடகப் பதிவு ஒன்றில், கூறியுள்ளார். டிட்வா புயலைத் தொடர்ந்து இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு இந்தியா அளித்து வரும் தொடர்ச்சியான ஆதரவு குறித்தும், அவர் […]