அரசியல் இலங்கை செய்தி

கோட்டாபயவுக்கு பயணத்தடை விதிக்கப்பட்ட பின்பே சுரேஷ் சலே அணி குழப்பம்!

  • June 10, 2026
  • 0 Comments

“சுரேஷ் சலே சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படவில்லை. விசாரணைகளை திசைதிருப்பவே சில அரசியல்வாதிகள் முற்படுகின்றனர். கோட்டாபய ராஜபக்ச உட்பட இருவருக்கு பயணம் தடை விதிக்கப்பட்ட பின்னரே குழப்பம் அடைந்துள்ளனர்.” இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது சுரேஷ் சலே விவகாரம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு , “ […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

அமெரிக்கா – ஈரான் மோதல்: பொருளாதார பாதிப்பு குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் கவலை!

  • June 10, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் அதிகரித்து வரும் இராணுவ மோதல்கள் குறித்து ஆஸ்திரேலியப் பிரதமர் Anthony Albanese தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார். ஈரான் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில், இந்த போர்ச் சூழல் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று Anthony Albanese எச்சரித்துள்ளார். டொனால்ட் ட்ரம்ப் அறிவிக்கும் அமைதி ஒப்பந்தங்கள் ஒருவித நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவதாகவும், இதனால் எரிபொருள் விலை உயர்வு போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். […]

உலகம் செய்தி

அமெரிக்க வீரர்களைக் கடலில் இருந்து மீட்ட ‘ரோபோக் கப்பல்’!

  • June 10, 2026
  • 0 Comments

மத்திய கிழக்குக் கடற்பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்களை, Saronic Corsair என்ற ஆளில்லா கடல் வழி ட்ரோன் வெற்றிகரமாக மீட்டது. மனித உயிர்களைப் பாதுகாக்க இத்தகைய சுயாதீன நீர்ப்பரப்பு வாகனங்களைப் (USV) பயன்படுத்துவது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். குறைந்த செலவில் விரைவாகச் செயல்படும் நோக்கில், அமெரிக்க கடற்படை தனது 59-வது பணிக்குழு (Task Force 59) மூலம் இந்த நவீனத் தொழில்நுட்பத்தைப் பரவலாகப் பயன்படுத்தி வருகிறது. ரகசியமான நீமூழ்கி […]

செய்தி தமிழ்நாடு பொழுதுபோக்கு

பாரதிராஜா உடலுக்கு முழு அரச மரியாதை!

  • June 10, 2026
  • 0 Comments

மறைந்த பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் அஞ்சலி செலுத்தி குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில் இயக்குநர் இமயம் பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பாரதிராஜாவின் மறைவையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை […]

உலகம் செய்தி

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!

  • June 10, 2026
  • 0 Comments

ஈரான் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதல்கள் மற்றும் கச்சா எண்ணெய் சேமிப்பு குறைந்ததன் விளைவாக, சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் தற்போது கணிசமாக உயர்ந்துள்ளன. முந்தைய வாரங்களில் காணப்பட்ட விலை சரிவு முடிவுக்கு வந்து, தற்போது ப்ரெண்ட் மற்றும் அமெரிக்க கச்சா எண்ணெய் ஆகியவற்றின் மதிப்பு சுமார் 0.7 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் தொடர்ந்து எட்டாவது வாரமாக எண்ணெய் இருப்பு குறைந்துள்ளதாக அமெரிக்க பெட்ரோலிய நிறுவனம் வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. எரிபொருள் தட்டுப்பாடு குறித்த அச்சம் […]

உலகம் செய்தி

ஈரானின் பல பகுதிகளில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல்!

  • June 10, 2026
  • 0 Comments

ஜோர்டானில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் நாட்டின் பல பகுதிகளில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. குறிப்பாக ஹார்முஸ் நீரிணை அருகே உள்ள ஜாஸ்க் மற்றும் பந்தர் அப்பாஸ் போன்ற முக்கிய இடங்கள் அமெரிக்கப் படைகளால் குறிவைக்கப்பட்டன. இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் தாக்குதல் நடத்திக்கொண்ட இந்த நிகழ்வு, பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவல் தொடர்பு மையங்கள் மற்றும் ரேடார் வசதிகள் சேதமடைந்துள்ளதாகக் கூறப்பட்டாலும், ஈரானியத் தரப்பில் ஏற்பட்ட முழுமையான […]

இந்தியா உலகம் செய்தி

ட்ரம்ப், மோடி அடுத்த வாரம் பிரான்ஸில் சந்திப்பு!

  • June 10, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இந்தியா பிரதமர் மோடி ஆகியோருக்கிடையிலான இரு தரப்பு சந்திப்பு அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. G – 7 உச்சி மாநாடு எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் பிரான்சின் எவியான் நகரில் நடைபெறவுள்ளது. G – 7 நாடுகளின் தலைவர்கள் இம்மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். குறித்த மாநாட்டுக்கு இணையாக நடைபெறும் கலந்துரையாடலின்போதே இரு நாட்டு தலைவர்களும் சந்திக்கவுள்ளனர். 2025 பெப்ரவரி மாதம் வாஷிங்டனில் நடந்த சந்தித்ததற்குப் பிறகு, இரு தலைவர்களுக்கும் […]

இலங்கை செய்தி

புலிகள் அமைப்பை ஊக்குவிக்க இடமளியோம்! NPP அரசு திட்டவட்டம்!

  • June 10, 2026
  • 0 Comments

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால Ananda Wijepala தெரிவித்தார். கிளிநொச்சி இளைஞர் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையிலான செயற் பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என்பதை நாடாளுமன்றத்திலும் திட்டவட்டமாக அறிவித்துள்ளோம். எனினும், உயிரிழந்த உறவுகளை நினைகூர முடியும். புலிகள் […]

இலங்கை செய்தி

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி: கிளிநொச்சியில் சோகம்!

  • June 10, 2026
  • 0 Comments

  கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி – நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் தொழிலகம் ஒன்றில் நேற்றுக் (09) காலை ஏற்பட்ட திடீர் மின்சார விபத்தில் சிக்கி இளம் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சோகச் சம்பவத்தில் கிளிநொச்சி நகர்ப் பகுதியைச் சேர்ந்த சிவகுருநாதன் சாரங்கன் (வயது 23) என்ற இளைஞரே உயிரிழந்தவராவார். உயிரிழந்த இளைஞர் நேற்றுக் காலை வழக்கம் போல் குறித்த தொழிலகத்தில் இயந்திரங்களைப் பயன்படுத்தித் தனது தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். […]

இலங்கை செய்தி

செம்மணிப் புதைகுழியில் இதுவரை 327 எலும்புக்கூடுகள் அடையாளம்!

  • June 10, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய (09) அகழ்வாராய்ச்சிப் பணிகளின் போது, பச்சிளம் சிசு மற்றும் சிறுவர்களுடையது என அடையாளம் காணப்பட்ட 8 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உட்பட மொத்தம் 9 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள்ன் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 20ஆம் நாள் விசேட தடயவியல் அகழ்வாராய்ச்சி நேற்று நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் மிகத் தீவிரமாக இடம்பெற்ற போதே இந்த விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. நேற்று முன்னெடுக்கப்பட்ட […]