ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் 33 கைதிகள் விடுதலை!
வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் 33 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக 31 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட நிலையில் 33 கைதிகள் இன்று விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ. சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 34 ஆவது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




