விளையாட்டு

இந்திய அணி வீரர்களுக்கு அடித்த அதிஷ்டம்!

  • March 10, 2026
  • 0 Comments

ICC T-20 உலகக்கிண்ண தொடரில் வெற்றிவாகை சூடிய இந்திய கிரிக்கெட் அணிக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையால் (BCCI) பெருந்தொகையான பணப்பரிவு வழங்கப்பட்டுள்ளது. இந்திய நாணய மதிப்பில் 131 கோடி ரூபா பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி பரிசுத் தொகையை உலகக் கிண்ணம் வென்ற அணியில் இடம்பெற்ற 15 வீரர்கள் ஒவ்வொருக்கும் தலா 6 கோடி ரூபா வீதம் கிடைக்கப்பெறும். மீதமுள்ள 41 கோடி ரூபா பயிற்சியாளர் குழு மற்றும் அணியின் இதர குழுவினருக்கு வழங்கப்படவுள்ளது. கடந்த […]

இலங்கை செய்தி

“தமிழகத்திலுள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப உதவி கோரல்”

  • March 10, 2026
  • 0 Comments

” வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியெழுப்பும் விசேட செயற்றிட்டமான ‘லன்ரேன்’ (LANTERN) ) திட்டத்தை, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்துடன் (UNDP) இணைந்து முன்னெடுக்கப்படும்.” இவ்வாறு புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் (IOM) இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பணிக்குழுத் தலைவர் திருமதி கிறிஸ்டின் பார்ஸோ தெரிவித்தார். புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பணிக்குழுத் தலைவருக்கும் ஆளுநருக்கும் இடையிலான இவ்விசேட சந்திப்பு, ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்றது. இச்சந்திப்பில், […]

இலங்கை செய்தி

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பு: நடக்கப்போவது என்ன?

  • March 10, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு போர் சூழவுக்கு மத்தியில் இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஒரு லீற்றர் ஒக்டேன் 92 பெட்ரோலின் விலை 24 ரூபா அதிகரித்து, 317 ரூபாவாக விற்கப்படுகின்றது. ஒக்டேன் 95 பெட்ரோல் விலை 25 ரூபா அதிகரிக்கப்பட்டு, 365 ரூபாவாக விற்கப்படுகிறது. ஓட்டோ டீசலின் விலை 22 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, 303 ரூபாவாகவும், சூப்பர் டீசல் விலை 24 ரூபா அதிகரிக்கப்பட்டு, 353 ரூபாவாகவும் விற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, மண்ணெண்ணெய் லீற்றருக்கு 13 ரூபாவால் […]

செய்தி

“ஈரானின் போர்க்கப்பல்களை இந்தியாவில் நிறுத்த அனுமதி”

  • March 10, 2026
  • 0 Comments

ஈரானின் 3 போர்க் கப்பல்களை இந்திய துறைமுகத்தில் நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது என்று வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் Dr. S. Jaishankar தெரிவித்தார். இந்தியாவில் இருந்து ஈரான் திரும்பிய ஐஆர்ஐஎஸ் தேனா போர்க்கப்பலை, அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் இந்து சமுத்திரத்தில் தாக்கி அழித்தது. இது விடயத்தில் இந்தியா மௌனம் காத்துவருவது தொடர்பில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் ஈரான் போருக்குப்பின் நடந்தது என்ன, இந்தியா எடுத்த நடவடிக்கைகள் எவை என்பன தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று […]

இலங்கை செய்தி

இளவாலையில் போதைப்பொருளுடன் கைதான இளைஞரிடமிருந்து திருட்டு நகைகள் மீட்பு!

  • March 10, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், இளவாலைப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், அவர் பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைத் திருடியமை கண்டறியப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய இளைஞரைச் சோதனையிட்ட போது, அவரிடமிருந்து 4 கிராம் 900 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுத் […]

இலங்கை செய்தி

கொழும்பிலிருந்து யாழுக்கு போதைப்பொருள் கடத்திய ஆணும், பெண்ணும் கைது!

  • March 10, 2026
  • 0 Comments

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு போதைப்பொருட்களை கடத்திச்சென்று விற்பனையில் ஈடுபட்டு வந்த ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் 630 போதை மாத்திரைகளும் , 5 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் விற்பனையில் ஆண் , பெண் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இருவரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரின் உடைமையில் இருந்து போதைப்பொருட்களை மீட்ட நிலையில், அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் , கொழும்பில் உள்ள போதைப்பொருள் […]

இலங்கை செய்தி

பள்ளி வாசலுக்குள் வாளுடன் புகுந்த இளைஞனால் யாழில் பரபரப்பு!

  • March 10, 2026
  • 0 Comments

யாழிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்றிரவு தொழுகை இடம்பெறும்போது, வாள் முனையில் ஒருவரை துரத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, ஓட்டுமடம் சந்தியில் இருந்து வட்டுக்கோட்டை செல்கின்ற வழியில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை இடம்பெற்றது. இதன்போது வாளேந்திய நபர் ஒருவர் இன்னொரு இளைஞரை துரத்திக்கொண்டு சென்றவேளை குறித்த இளைஞன் பள்ளிவாசலுக்குள் புகுந்து, அங்குள்ள மதிலில் ஏறி தப்பிச் சென்றுள்ளார். இதன்போது வாளுடன் வந்த சந்தேகநபர், பள்ளிவாசலில் இருந்த இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு, வாள் பறிமுதல் செய்யப்பட்டது. […]

உலகம் செய்தி

போரின் முடிவு எங்கள் கையில்: ஈரான் பதிலடி!

  • March 10, 2026
  • 0 Comments

“போரின் முடிவை நாங்களே தீர்மானிப்போம்.” என்று , ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்ற ட்ரம்பின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே மேற்படி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ போரின் முடிவை தீர்மானிப்பது நாங்கள் தான.  பிராந்தியத்தின் சமன்பாடுகளும் எதிர்கால நிலையும் இப்போது நமது ஆயுத படைகளின் கைகளில் உள்ளன. அமெரிக்கப் படைகள் போரை முடிவுக்குக் கொண்டுவராது.” […]

உலகம் செய்தி

போர் விரைவில் முடிவுக்கு வரும்: ட்ரம்ப் நம்பிக்கை!

  • March 10, 2026
  • 0 Comments

ஈரான்மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump தெரிவித்தார். வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ மிக விரைவில் போர் முடிவுக்கு வரும் என நினைக்கிறேன், அவர்களது தலைமை உட்பட அவர்களிடம் உள்ள அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன.” எனவும் ட்ரம்ப் சுட்டிக்காட்டினார். ஹார்முஸ் நீரினை மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருவது குறித்து எழுப்பட்ட கேள்விக்கு, “ ஈரான் Iran அதுபோன்ற செயல்களில் […]

ஆஸ்திரேலியா உலகம்

ஈரான் வீராங்கனைகளுக்கு புகலிடம் வழங்கியது ஆஸ்திரேலியா!

  • March 10, 2026
  • 0 Comments

ஈரானின் தேசிய மகளிர் கால்பந்தாட்ட அணி வீராங்கணைகளுக்கு ஆஸ்திரேலியா Australia புகலிடம் வழங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சரை, வீராங்கணைகள் நேற்றிரவு சந்தித்துள்ளனர். இதன்போது உரிய ஆவணங்களில் ஆவணங்களிடம் கைச்சாத்திடப்பட்டு, மனிதாபிமான விசா வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ள ஈரானின் மகளிர் கால்பந்தாட்ட அணி வீராங்கணைகளுக்கு அடைக்கலம் வழங்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump வலியுறுத்தியுள்ளார். ஆஸ்திரேலியா அடைக்காலம் வழங்காதபட்சத்தில் தமது நாடு அவர்களை பொறுப்பேற்கும் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

error: Content is protected !!