உலகம்

ஈரான் உளவாளிகள் நால்வர் லண்டனில் கைது!

  • March 6, 2026
  • 0 Comments

ஈரான் உளவுத் துறையுடன் தொடர்பு வைத்துள்ளனர் எனச் சந்தேகிக்கப்படும் நால்வர் லண்டனில் London கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரானியர் ஒருவரும், பிரிட்டிஷ் மற்றும் ஈரான் குடியுரிமை கொண்ட மூவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். லண்டனில் உள்ள யூத சமூகத்தினர் மற்றும் அவர்களின் இருப்பிடங்களைக் இவர்கள் கண்காணித்து வந்துள்ளனர் என தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டது. இதன் ஓர் அங்கமாக Watford மற்றும் Barnet உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை முன்னெடுக்கப்பட்டது. இதன்போதே கைது இடம்பெற்றுள்ளது. […]

செய்தி

யாழ்.படகு விபத்து: உயர்மட்ட விசாரணைக்கு பணிப்பு!

  • March 6, 2026
  • 0 Comments

யாழ். படகு விபத்துக்கான முழுமையான காரணங்களை கண்டறிவதற்குரிய அவசர விசாரணை முன்னெடுக்குமாறு கடற்படையினரும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரால் Ramalingam Chandrasekar இது தொடர்பான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு அமைச்சர் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார். துயரத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு அரசாங்கம் சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். விபத்துக்குள்ளான படகு பயணத்திற்கு பாதுகாப்பான நிலையில் இருந்ததா, […]

செய்தி

கடைசி குண்டு தீரும்வரை போராடுவோம்: ஈரான் பிரதி அமைச்சர் டெல்லியில் கருத்து!

  • March 6, 2026
  • 0 Comments

“கடைசி குண்டு தீரும்வரை, கடைசி வீரர் இருக்கும்வரை ஈரான் போராடும். அதைவிட வேறு வழியில்லை.” என்று ஈரான் பிரதி வெளிவிவகார அமைச்சர் சயீத் கத்தீப்சாதே Saeed Khatibzadeh தெரிவித்தார். இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர், டெல்லியில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். “ அமெரிக்காவும் இஸ்ரேலும் எங்களை தாக்கி, ஆக்கிரமிப்பு நடத்தி வருகின்றன. ஈரானுக்கு அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்த மேற்படி நாடுகள் முயற்சிக்கின்றன. எனது நாட்டின் குடிமக்கள் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் குண்டுகளை வீசி தாக்குதல்களை […]

உலகம்

ஈரான், லெபனான் மீது இஸ்ரேல் உக்கிர தாக்குதல்! தொடரும் பதற்றம்!!

  • March 6, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் லெபனான்மீதான வான் வழித் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கமைய தெஹ்ரானில் உள்ள முக்கிய அரசு கட்டமைப்புகள் மற்றும் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் தளங்களை இலக்கு வைத்து இஸ்ரேலிய இராணுவம் குண்டு மழை பொழிந்துவருகின்றது. இந்த தாக்குதலுக்கு அமெரிக்க படைகள் வரலாற்று சிறப்புமிக்க ஒருங்கிணைப்பை வழங்குகின்றது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. எதிரிகளின் வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை தளங்களை சிதைப்பதே தங்களின் முதல் கட்ட நோக்கம் என்றும் கூறியுள்ளது. ஈரானும் பதிலடி தாக்குதலை நடத்திவருகின்றது. […]

இலங்கை செய்தி

மட்டக்களப்பு வாவியில் உலா வரும் காட்டு யானைகள்

  • March 6, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு வாவியில் இரண்டு காட்டு யானைகள் ஜோடியாக நேற்று மாலை வேளயிலிருந்து (05.03.2026) உலாவித் திரிவதை அப்பகுதி மக்கள் அவதானித்துள்ளனர். மட்டக்களப்பு வாவியின் துறைநீலாவணை பகுதியிலேயே இக்காட்டு யானைகள் உலாவித்திரிவதை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறு வாவியில் உலாவும் காட்டு யானைகளை அப்பகுதி மக்கள் பார்வையிட்டு வருவதுடன், தமது குடியிருப்புக்களுக்குள் உட்புகுந்து விடுமோ என்ற அச்சத்தின் மத்தியிலும் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பிரதேசத்தில் துவம்சம் செய்து வந்த காட்டுயானைகள் அண்மைக்காலமாக மட்டக்களப்பு வாவியை ஊடறுத்து எழுவாங்கரைப் […]

செய்தி

வெனிசுலா பாணியில் ஈரானில் புதிய தலைவர்: ட்ரம்ப் வியூகம்!

  • March 6, 2026
  • 0 Comments

வெனிசுலாவில் நடந்தது போல, ஈரானிலும் புதிய தலைவர் நியமனத்தில் நான் தனிப்பட்ட முறையில் ஈடுபட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானின் புதிய உச்ச தலைவராக கமெனியின் 2-வது மகன் மொஜ்தபா கமெனி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதனை ஏற்க முடியாது எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக ஈரான் […]

செய்தி

பக்தர்களுடன் கடலில் மூழ்கியது படகு: இருபர் பலி: யாழில் பெரும் சோகம்!

  • March 6, 2026
  • 0 Comments

யாழ்.கடற்பரப்பில் படகொன்று இன்று விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளனர் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மேலும் ஐவர் மீட்கப்பட்டு யாழ்.வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பிரதேச மக்கள், மீனவர்கள் மற்றும் கடற்படையினர் இணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். யாழ். குருநகர் இறங்குத்துறையில் இருந்து கிளிநொச்சி பாலைதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க பக்தர்களை ஏற்றிச்சென்ற படகே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. படகில் முதியவர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் எனப் பலர் பயணித்துள்ளனர் என தெரியவருகின்றது. இதுவரை மூன்று பேர் மாத்திரமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். […]

இலங்கை செய்தி

சாய்ந்தமருது பகுதியில் கடலில் மூழ்கியது மீன்பிடி இயந்திரப் படகு!

  • March 6, 2026
  • 0 Comments

இயந்திரம் உட்பட வலைகளுடன் கடலில் நங்கூரத்தில் இணைக்கப்பட்டு தரித்திருந்த பாரிய ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப் படகொன்று கடலில் மூழ்கியுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்திய சாய்ந்தமருது பிரதேச கடல் பகுதியில் இச் சம்பவம் வியாழக்கிழமை(5) மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த படகினை மீட்டு கடற்கரைப் பகுதிக்கு இழுத்து கொண்டு வருவதற்கான முயற்சிகள் பல தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு மூழ்கிய படகு சுமார் ஒரு கோடிக்கும் மேல் பெறுமதியானதுடன் கனரக வாகனத்தின் உதவியுடன் கரையை நோக்கி இழுக்கப்பட்டது. கடற்படையின் உதவியும் […]

உலகம்

ஏவுகணை தாக்குதல்: குவைத்திலுள்ள தூதரகத்தை மூடியது அமெரிக்கா!

  • March 6, 2026
  • 0 Comments

குவைத்தில் உள்ள தமது நாட்டு தூதுரகத்தை அமெரிக்கா மூடியுள்ளது. அங்கிருந்து அனைத்து பணியாளர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர். தூதரகத்தில் உள்ள ரகசியத் தரவுகள் மற்றும் கோப்புகளை முழுமையாக அழிக்குமாறு தூதரக ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குவைத் வான்பரப்பில் ஊடுருவிய ஏவுகணைத் தாக்குதலை அந்த நாட்டு இராணுவம் முறியடித்ததைத் தொடர்ந்து இந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வான்வழித் தாக்குதலால் சில வாகனங்கள் சேதமடைந்தாலும், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், அமெரிக்கா தனது பணியாளர்களின் […]

உலகம்

ஹார்முஸ் நீரிணை வழி முடக்கம்: ஈரானிடம் பாதுகாப்பு கோருகிறது சீனா!

  • March 6, 2026
  • 0 Comments

தமது நாட்டு கப்பல்களுக்குப் பாதுகாப்பு கோரி ஈரானுடன் சீனா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் ஹார்முஸ் நீரிணை வழியாக எரிசக்தி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இதற்குரிய பேச்சு இடம்பெறுகின்றது. உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கை வகிக்கும் இப்பாதையில் நூற்றுக்கணக்கான கப்பல்கள் முடங்கியுள்ளதால், எரிசக்தி விலைகள் சர்வதேச அளவில் அதிகரித்துள்ளன. இந்த மோதலில் ஈரான் மீதான தாக்குதல்களைச் சீனா கண்டித்துள்ளதுடன், தனது வர்த்தக நலன்களைப் பாதுகாக்க ஈரானுடனான உறவை […]

error: Content is protected !!