விளையாட்டு

அபார வெற்றியுடன் 5 ஆவது இடத்துக்கு முன்னேறியது சென்னை!

  • April 24, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரின் 33-வது லீக் ஆட்டத்தில், Mumbai Indians அணியை 103 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி Chennai Super Kings வெற்றி பெற்றது. வான்கடே மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச்சுழற்சியில் வென்ற Mumbai அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. Chennai அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாகத் தொடங்கி 22 ஓட்டங்களுடன் வெளியேறினார். பின்னர் களம் புகுந்த சஞ்சு சாம்சன், மும்பை பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். 54 பந்துகளில் […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்: ஆஸ்திரேலியாவுக்கு மகிழ்ச்சியான செய்தி!

  • April 24, 2026
  • 0 Comments

அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவதற்கான $276 மில்லியன் மதிப்பிலான முதல் முக்கிய ஒப்பந்தத்தை பென்டகன் அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான AUKUS பாதுகாப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவே இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இந்தத் திட்டத்திற்கான முழு நிதியையும் ஆஸ்திரேலிய அரசாங்கம் வழங்குகிறது, மேலும் இதற்கான வடிவமைப்புப் பணிகளை ஜெனரல் டைனமிக்ஸ் எலக்ட்ரிக் போட் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது. அமெரிக்கக் கடற்படையின் உற்பத்தி வேகம் மந்தமாக இருந்தாலும், இந்த ஒப்பந்தம் திட்டத்தின் முன்னேற்றத்தைக் காட்டுவதாக அதிகாரிகள் கருதுகின்றனர். […]

உலகம் செய்தி

இஸ்ரேல், லெபனானுக்கிடையிலான போர் நிறுத்தம் மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிப்பு!

  • April 24, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் லெபனானுக்கு இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் இரு நாடுகளின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட முக்கிய ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. “மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைக் குறைக்கும் நோக்கில் இந்த காலக்கெடு நீட்டிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரு தரப்பினருக்கும் இடையே நிலவி வரும் மோதல்களைத் தவிர்த்து, அமைதியை நிலைநாட்ட […]

உலகம் செய்தி

காசாவில் இன அழிப்பு: இஸ்ரேல் தாக்குதல்களில் 72,562 பேர் பலி!

  • April 23, 2026
  • 0 Comments

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 72,562 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 172,320 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாலஸ்தீன சுகாதார அமைச்சின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டே மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஒக்டோர் 7 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த இன அழிப்பு இடம்பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையில் கடந்த வருடம் ஒக்டோபர் 10 ஆம் திகதி போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது. எனினும், போர்நிறுத்த விதிமுறைகளைமீறி இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல்களை நடத்திவருகின்றது. போர் […]

உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணையில் ஈரான் படகுகளை அழிக்குமாறு ட்ரம்ப் உத்தரவு!

  • April 23, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை வைக்கும் படகுகளை சுட்டு வீழ்த்துமாறு அமெரிக்க கடற்படைக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஈரானுக்கு அருகிலுள்ள முக்கிய கடல் பகுதியில் சிறிய ரக படகுகள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டால், தயக்கமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், எதிரிகளின் அச்சுறுத்தல்களை முறியடிப்பதுமே இந்த உத்தரவின் பிரதான நோக்கம் எனக் கூறப்பட்டுள்ளது. அதேவேளை, ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஈரானால் வைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் அமெரிக்கா தற்போது ஈடுபட்டுவருகின்றது.

உலகம் செய்தி

எமது மண்ணிலிருந்து இஸ்ரேல் படைகள் வெளியேற வேண்டும்: லெபனான் பிரதமர் திட்டவட்டம்!

  • April 23, 2026
  • 0 Comments

லெபனான் மண்ணிலிருந்து இஸ்ரேலியப் படைகள் முழுமையாக வெளியேறினால் மட்டுமே எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட முடியும் என்று லெபனான் பிரதமர் Nawaf Salam திட்டவட்டமாக அறிவித்துள்ளார். லெபனான் எல்லையில் பாதுகாப்பு மண்டலங்கள் உருவாக்கப்படுவதை ஏற்க முடியாது எனவும் அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். எனவே, அமைதி பேச்சின்போது இது தொடர்பில் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்காவின் தலையீடு அவசியம் எனவும் லெபனான் பிரதமர் Nawaf Salam இடித்துரைத்துள்ளார். ஹிஸ்புல்லா அமைப்பின் ஆயுதங்களைக் களைவது என்பது ஒரு நீண்டகாலச் செயல்முறை என்றும், […]

உலகம் செய்தி

ஈரானிலிருந்து வந்த கப்பலை இந்திய பெருங்கடலில் வழிமறித்த அமெரிக்கா!

  • April 23, 2026
  • 0 Comments

ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பலொன்றை அமெரிக்கப் படைகள், இந்தியப் பெருங்கடலில் வைத்து வழிமறித்துள்ளன. மெஜஸ்டிக் எக்ஸ் என்ற பெயருடைய கப்பலில் ஏறி அமெரிக்க ராணுவத்தினர் தீவிரமான சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். ஈரானுக்குத் தேவையான பொருள் உதவிகளை வழங்கும் சந்தேகத்திற்குரிய கப்பல்களைத் இவ்வாறு தொடர்ந்து கண்காணித்து தடுத்து நிறுத்தப்போவதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. சர்வதேச சட்டங்களை மீறும் மற்றும் விரோதப் போக்குடைய கப்பல்களைக் கட்டுப்படுத்தும் ஒரு பகுதியாக இந்த கடல்சார் தலையீடு அமைந்துள்ளது என அமெரிக்க […]

உலகம் செய்தி

எரிசக்தி பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: IEA தலைவர் எச்சரிக்கை!

  • April 23, 2026
  • 0 Comments

உலகளாவிய எரிசக்தி பாதுகாப்புக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச எரிசக்தி முகமையின் International Energy Agency (IEA) தலைவர் Fatih Birol எச்சரிக்கை விடுத்துள்ளார். போர்ச்சூழ்நிலையால் நாளாந்தம் சுமார் 13 மில்லியன் பெரல் எண்ணெய் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் விளைவாக எரிபொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட தாக்கங்கள் ஏற்படக்கூடும். இந்த நெருக்கடியைச் சமாளிக்க உலக நாடுகள் புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்கக்கூடும் எனவும் IEA தலைவர் எதிர்வுகூறியுள்ளார். […]

உலகம் செய்தி

ஈரான் வசமுள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை மீட்பதில் ட்ரம்ப் உறுதி!

  • April 23, 2026
  • 0 Comments

  ஈரான் வசமுள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம் அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி ட்ரம்ப் உறுதியாக உள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அதேபோல ஒரு தரமான மற்றும் நிரந்தரமான ஒப்பந்தத்தை எட்டுவதே ட்ரம்பின் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் தரப்பிலிருந்து உறுதியான பதில் வராத காரணத்தினாலேயே போர் நிறுத்த காலக்கெடுவை நீட்டிக்க டிரம்ப் முடிவு செய்தார் என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதேவேளை, அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் 2ஆம் கட்ட அமைதி பேச்சை ஆரம்பித்து […]

இந்தியா செய்தி

பலமடைந்துள்ள இந்திய ராணுவ வலிமை!

  • April 23, 2026
  • 0 Comments

“ இந்தியாவின் ராணுவ வலிமை முன்னெப்போதையும் விட பன் மடங்கு வலுப்பெற்றுள்ளது.” – என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சூளுரைத்துள்ளார். ஜம்மு, காஷ்மீரின் பஹல்காமில் தீவிர வாதிகள் தாக்குதல் நடத்தி நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இது தொடர்பாக டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையிலேயே பாதுகாப்பு அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். ‘ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் நமது ராணுவம் என்ன சாதித்துள்ளது என்பதை நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. நமது ராணுவ வலிமை வலுப்பெற்றுள்ளது. இந்தியா உலகிலுள்ள […]

error: Content is protected !!