ஈரான் தலைநகரில் மீண்டும் விமான நிலையங்கள் திறப்பு
ஈரான் தலைநகர் டெஹ்ரானின் பிரதான விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. தலைநகர் டெஹ்ரானில் உள்ள இமாம் கொமெய்னி (Imam Khomeini) மற்றும் மெஹ்ராபாத் (Mehrabad) ஆகிய இரண்டு முக்கிய விமான நிலையங்களும் தற்போது மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போர் காரணமாக வான்வழிப் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த விமான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





