இஸ்ரேலின் தாக்குதலில் 73000 பாலஸ்தீனியர்கள் கொலை!
பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை 73,001 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அக்டோபர் 7, 2023 அன்று தாக்குதல் தொடங்கியதில் இருந்து இதுவரை சுமார் 173,200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட பலவீனமான போர் நிறுத்தம் அமுலில் உள்ளபோதும் இஸ்ரேல் தொடர்ச்சியாக தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



