அரசியல் இலங்கை செய்தி

கொழும்புக்கு தோள் கொடுக்கும் பீஜிங்! அநுரவிடம் சீன தூதுக்குழு உறுதி!

  • December 23, 2025
  • 0 Comments

“ இலங்கைக்கு தேவையான உதவிகளை சீனா நிச்சயம் வழங்கும்.” – என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது மத்திய குழுவின் உறுப்பினரும், Xizang தன்னாட்சி பிராந்தியத்தின் கம்யூனிஸ்ட் கட்சி குழுவின் செயலாளருமானவாங் ஜுன்செங் உறுதியளித்துள்ளார். “ ரீ பில்டிங் ஸ்ரீலங்கா” திட்டத்தில் சீனாவின் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளத் தயார் எனவும் அவர் கூறினார். இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சீன தூதுக்குழு, ஜனாதபதி அநுரகுமார திஸாநாயக்கவை இன்று (23) சந்தித்து பேச்சு நடத்தியது. அனர்த்த நிலைமையில் […]

அரசியல் இலங்கை செய்தி

பேரிடரால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு எவ்வளவு? புள்ளி விபரம் கோருகிறது ஐதேக!

  • December 15, 2025
  • 0 Comments

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறு நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்கப்படும் என்பன தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவே இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு, “ 6 ஆயிரம் வீடுகள் முழுமையாக சேதமடைந்திருந்தால் 6 ஆயிரம் கோடி ரூபா வழங்கப்பட வேண்டும். இது எவ்வாறு கையளிக்கப்படும்? பகுதியளவு […]

இலங்கை செய்தி

இலங்கையை புரட்டிபோட்ட தித்வா புயல்: 90 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் சேதம்!

  • December 10, 2025
  • 0 Comments

டித்வா புயல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 639 ஆக அதிகரித்துள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 203 பேர் காணாமல்போயுள்ளனர். 5 ஆயிரத்து 350 வீடுகள் முழமையாகவும், 86 ஆயிரத்து 882 வீடுகள் பகுதியளவும் சேதம் அடைந்துள்ளன என்று மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 27 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் இடைத்தங்கல் முகாம்களில் தொடர்ந்து தங்கவைக்கப்பட்டுள்ளன. மண்சரிவு மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்த […]

இலங்கை

வெளிநாட்டு உதவிகளை கண்காணிக்க சிறப்பு குழு நியமனம்! 

  • December 9, 2025
  • 0 Comments

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வெளிநாடுகளால் கொடையாக வழங்கப்படும் பொருட்கள் மற்றும் உபகரணங்களை, திறம்பட நிர்வகிப்பதை மேற்பார்வையிடுவதற்கான சிறப்புக் குழுவொன்றை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நியமித்துள்ளார். பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையிலான இந்தக் குழுவில், தேசிய பேரிடர் நிவாரண சேவைகள் மையத்தின் மேலதிக செயலர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மையத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட மூத்த அரசு அதிகாரிகள், முப்படைகளின் தளபதிகள், காவல்துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். கொடைகள் உதவி தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்படுவதை […]

இலங்கை

இடர் முகாமைத்துவ பொறிமுறையை மாற்றுமாறு வலியுறுத்து! 

  • December 9, 2025
  • 0 Comments

பேரிடரில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இடர் முகாமைத்துவ பொறிமுறையை நாம் மாற்றியமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட நிலையில் அடைத்தங்கள் முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்தவேளையிலேயே சஜித் பிரேமதாச இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ காலநிலை மாற்றங்களால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. இதன் விளைவாக ஏற்படும் அனர்த்தங்கள் மற்றும் அபாயங்கள் குறித்து தெரிவிக்கும் முறையான முன்னெடுப்பு நடவடிக்கை […]

இலங்கை

மத்திய மாகாணத்தில் பேரிழப்பு: 351 பேர் உயிரிழப்பு! 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் சேதம்!

  • December 9, 2025
  • 0 Comments

டித்வா புயலையடுத்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் மத்திய மாகாணம் பேரிழப்பை சந்தித்துள்ளது. உயிரிழப்பு மற்றும் உடமை இழப்பு என்பன இம்மாகாணத்திலேயே அதிகளவு இடம்பெற்றுள்ளன. இலங்கையில் கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதே மத்திய மாகாணமாகும். கண்டி மாவட்டத்தில் 234 பேர், நுவரெலியா மாவட்டத்தில் 89 பேர், மாத்தளை மாவட்டத்தில் 28 பேர் என பேரிடரால் மத்திய மாகாணத்தில் 351 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்படி மூன்று மாவட்டங்களிலும் மொத்தமாக 127 பேர் காணாமல்போயுள்ளனர். நுவரெலியா, […]

இலங்கை

மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தேசிய வேலைத்திட்டம்! 

  • December 8, 2025
  • 0 Comments

மலையக மக்களுக்கான காணி உரிமை உட்பட அவர்கள் எதிர்நோக்கும் நீண்டகால பிரச்சினைகள் சம்பந்தமாக மலையக பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அத்துடன், அம்மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குரிய தேசிய வேலைத்திட்டத்துடன் கூடிய பொறிமுறை உருவாக்கப்படும் எனவும் அவர் கூறினார். நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே கருத்து வெளியிட்ட ஜீவன் தொண்டமான் எம்.பி. , “சீர்திருத்தம், வீடமைப்பு தொடர்பில் பேசப்பட்டாலும், […]

அரசியல் இலங்கை

இலங்கைக்காக ஆஸ்திரேலியாவிடம் உதவி கோருகிறார் எதிர்க்கட்சி தலைவர் 

  • December 8, 2025
  • 0 Comments

டித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் உட்கட்டமைப்பு வசதிகளை மீளமைத்து, மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு ஆஸ்திரேலியாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவரை இன்று சந்தித்தவேளையிலேயே இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவரை இன்று சந்தித்து பேச்சு நடத்தினார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இச்சந்திப்பு […]

இலங்கை

மீட்பு பணிக்காக அமெரிக்க படையினரும் களத்தில்!

  • December 8, 2025
  • 0 Comments

பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு பல நாடுகளும் நேசக்கரம் நீட்டிவரும் நிலையில், மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கு அமெரிக்க மரைன் படைப்பிரிவைச் சேர்ந்த 60 மீட்புப் படையினர் கொழும்பு வந்துள்ளனர். அமெரிக்க விமானப்படையின் இரண்டு சி-130 ஹெல்குலெஸ் விமானங்களில் உதவிப் பொருட்கள் சகிதம் இவர்கள் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். நாடு டுமுவதிலும் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்வதற்கும் விநியோகிப்பதற்கும் அமெரிக்க படையினர் இலங்கை விமானப்படையுடன் இணைந்து பணியாற்றவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை […]

இலங்கை

தொடரும் உதவிகள்: தமிழக நிவாரணமும் கையளிப்பு!

  • December 8, 2025
  • 0 Comments

இலங்கை மக்களுக்காக, தமிழக அரசினால் அனுப்பி வைக்கப்பட்ட 300 மெட்ரிக் தொன் அவசர நிவாரணப் பொருட்கள் நேற்று அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டது. தமிழக அரசினால் அனுப்பப்பட்ட 1000 தொன் நிவாரணப் பொருட்களில் ஒரு பகுதியான 300 மெட்ரிக் தொன் பொருட்கள், இந்திய கடற்படையின் 3 தரையிறங்கு கலங்கள் மூலம், கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. மேலும் 700 தொன் உதவிப் பொருட்களை ஏற்றிய மற்றொரு கப்பல் இன்று காலை திருகோணமலையை வந்தடையவுள்ளது. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பொருட்களை, இந்திய தூதுவர் […]

error: Content is protected !!