இலங்கை

அலுத்கமவில் கரையொதுங்கிய தலையால் பரபரப்பு!

  • May 23, 2026
  • 0 Comments

அலுத்கம, மொரகல்லவில் வெட்டப்பட்ட நிலையில் தலையொன்று மீட்கப்பட்டுள்ளது. மொரகல்லவில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலா விடுதிக்குப் பின்புறம் அமைந்துள்ள கடற்கரையில், இந்த தலை கண்டறியப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார் தலையை கைப்பற்றி விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் ஆண் ஒருவருக்கு சொந்தமானது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.