பொழுதுபோக்கு

வெற்றிமாறனுக்காக காத்திருக்காமல் வெற்றி இயக்குனருடன் கூட்டணி அமைத்த சூர்யா!

நடிகர் சூர்யா இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தற்போது ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வருடத்தின் இறுதிவரை படப்பிடிப்பு நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

கங்குவா படத்தை தொடர்ந்து சூர்யா மாரி செல்வராஜின் இயக்கத்தில் வாடி வாசல் திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இதில் சிக்கல் எழுந்துள்ளது.

கங்குவா டீசர் : ஐந்து மொழிகளில் குரல் கொடுக்கும் பிரபலங்கள் | Dinamalar

அதாவது மாரி செல்வராஜ் விடுதலை திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள். இந்த படம் கொடுத்த வெற்றியால் தற்போது இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக காட்சிகளை செதுக்கி வருகிறார் என்றே சொல்ல வேண்டும்.

ஆகவே வாடி வாசல் படத்தை எடுப்பதில் இழுப்பறி நிலை நீடிக்கும் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே சூர்யா, கங்குவா படத்தை தொடர்ந்து வெற்றிமாறனுக்காக காத்திருக்காமல்,  சுதா கொங்கராவுடன் புதிய படத்தில் இணைய இருக்கிறார்.

Soorarai Pottru' review: Suriya's best outing in a long time | The News Minute

ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான சூரரைப் போற்று படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மீண்டும் இவர்கள் இணைய உள்ள செய்தி சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் ஜிவி பிரகாஷ் தான் இந்த படத்திற்கும் இசையமைக்க இருக்கிறாராம்.

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content