இலங்கை

இலங்கை வரவு-செலவுத் திட்டம் – போலியான விமர்சனங்களைத் தவிர்க்குமாறு கோரிக்கை

வரவு- செலவுத் திட்டம் தொடர்பில் போலியான விமர்சனங்களை முன்வைக்காது, தர்க்க ரீதியிலான யோசனைகளை முன்வைக்குமாறு எதிரணிகளிடம், ஆளுங்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றுவருகின்றது.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சார்பில், நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றினார்.

வரவு- செலவுத் திட்ட முன்மொழிவுகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அத்துடன், பாதீட்டிலுள்ள குறைப்பாடுகளையும் சுட்டிக்காட்டினார்.

அதன்பின்னர் ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உரையாற்றினார்.

நாட்டு மக்களுக்காக முன்வைக்கப்பட்டுள்ள வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அத்துடன், பாதீடு தொடர்பில் போலியான விமர்சனங்களை முன்வைக்காமல், தர்க்க ரீதியிலான கருத்துகளை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்