இலங்கை செய்தி

இஸ்ரேலில் இருந்து நாடு திரும்ப விரும்பும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

காஸாவில் இடம்பெற்று வரும் மோதல்கள் காரணமாக இலங்கையர் எவரேனும் இலங்கைக்கு வர விரும்பினால் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு போதிய நிதி வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்றுடனான விசேட கலந்துரையாடலில் தூதுவர் தெரிவித்தார்.

இலங்கைத் தூதுவர் நிமல் பண்டாரவும் இஸ்ரேலில் இடம்பெற்று வரும் மோதல்கள் தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

இதேவேளை, இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களுக்கு நிவாரணம் வழங்க விசேட வேலைத்திட்டம் ஒன்றை அமைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, 011 796 63 96 என்ற தொலைபேசி இலக்கம், 076 746 33 91 என்ற வாட்ஸ்அப் இலக்கம் அல்லது opscenga@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாக உங்களது தேவைகளை சமர்ப்பிக்கவோ அல்லது தேவையான தகவல்களை அறிந்து கொள்ளவோ ​​முடியும்.

(Visited 3 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content