இந்தியா பொழுதுபோக்கு

விமானத்தில் சக பயணியால் பாலியல் துன்புறுத்தல்… பிரபல நடிகை புகார்!

மலையாள நடிகை திவ்ய பிரபா விமானத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

நடிகை திவ்யா பிரபா கடந்த அக்டோபர் 10ம் திகதி மும்பையில் இருந்து கொச்சிக்கு ஏர் இந்தியா ஃபிளைட்டில் பயணித்த போது, சக பயணியால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதையும் இதற்காக காவல் துறையில் புகார் அளித்துள்ளது பற்றியும் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் அளித்துள்ள புகாரில், ‘என் அருகில் குடித்து விட்டு அமர்ந்திருந்த சகபயணி ஒருவர், எந்தவிதமான லாஜிக்கும் இல்லாமல் விவாதம் செய்ய ஆரம்பித்தார். என்னை பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தினார். இதுகுறித்து, நான் விமானப் பணிப்பெண்ணிடம் புகார் அளித்த போது, அவர்கள் எடுத்த ஒரே நடவடிக்கை அவரது இருக்கையை மாற்றியது மட்டுமே.

Malayalam actress alleges harassment onboard flight, lodges complaint - The  Week

விமானங்களில் பயணிகளின் பாதுகாப்பை வலியுறுத்தும் அதே வேளையில், சம்பவத்தை விசாரித்து குற்றவாளிகளைத் தண்டிக்குமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

திவ்யாவின் இந்த புகாருக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திரையுலகைச் சேர்ந்தவர்களும் ஆதரவுக் குரல் எழுப்பி வருகின்றனர்.

(Visited 9 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content