பொழுதுபோக்கு

சல்மான் கான் வீடருகே துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் மர்ம மரணம்!! பாலிவுட்டில் பரபரப்பு

பாலிவுட்டின் பிரபல நடிகர் சல்மான் கானின் மும்பையில் – பந்த்ரா பகுதியில் உள்ள வீட்டருகே பைக்கில் வந்த மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் தப்பான் என்பவர் சட்டவிரோதமாக துப்பாக்கி விற்பனை செய்த குற்றத்திற்காக கடந்த வாரம் கைது செய்யப்பட்டு மும்பை போலீஸ் தலைமையகத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

தப்பான் உள்பட ஐந்து பேர் சிறையில் இருந்துள்ளனர். நேற்று காலை 11 மணியளவில் தப்பான் கழிப்பறைக்கு சென்றிருக்கிறார். நீண்ட நேரமாகியும் அவர் வராததால், சந்தேகமடைந்த காவல்துறையினர் கதவை உடைத்து பார்த்தபோது, தப்பான் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார்.

போர்வையால் தூக்கிட்டுக் கொண்ட தப்பானை மீட்ட போலீசார் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காததால் தப்பான் மரணம் அடைந்தார்.

தப்பான் தற்கொலை செய்துகொண்ட சமயத்தில் அப்பகுதியில் ஐந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து அடுத்தக்கட்ட விசாரணையை நடத்த உள்ளனர்.

தப்பானின் உடல் மும்பையில் உள்ள ஜேஜே மருத்துவமனையில் இன்று உடற்கூராய்வு செய்யப்பட உள்ளது. சக கைதிகளிடம் நடத்திய விசாரணையில் பெயில் கிடைக்காத விரக்தியில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறி உள்ளனர்.

ஆனால் தப்பானின் உறவினர்கள் இது திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள கொலை என பகீர் குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளனர். தப்பான் தற்கொலை செய்யும் அளவுக்கு கோழை இல்லை என அவரின் சகோதரர் அபிஷேக் கூறி இருக்கிறார்.

தப்பானின் கொலையில் சதி நடந்திருப்பதாக கூறி இருக்கும் அவரது வழக்கறிஞர், கடந்த முறை கோர்ட்டில் ஆஜரான போது கைதான நான்கு பேரும் சிறையில் தங்களுக்கு பாதுகாப்பில்லை என கூறியதாக தெரிவித்துள்ளார். இதனால் இந்த விவகாரம் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

(Visited 3 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content