குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற உணவகம் – 10 இலட்சம் ரூபா அபராதம்
குடிநீர் போத்தலை அதன் அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றத்திற்காக,
ஹப்புத்தளையில் உள்ள உணவகம் ஒன்றுக்கு 10 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்ட நுகர்வோர் விவகார அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பைத் தொடர்ந்து,
பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தினால் கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி இந்த அபராதம் விதிக்கப்பட்டது.
ஹப்புத்தளை, வெலிமடை வீதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான உணவகம் ஒன்றிலேயே இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
இதன்போது, அங்கீகரிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்கள் விற்பனை செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, குறித்த உணவகத்திற்கு 1,000,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.




