உலகம்

இந்தோனேசியாவில் ஆபத்தின் மத்தியில் தொடரும் மீட்பு பணி – பலி எண்ணிக்கை உயர்வு!

இந்தோனேசியாவின் ஜாவா (Java) பகுதியில் இடம்பெற்ற நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. மீட்பு பணி தொடர்வதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

அந்நாட்டின் பேரிடர் தணிப்பு நிறுவனம் இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

கடும் மழை காரணமாக சிலாகாப் நகரத்திலும் (Cilacap), பஞ்சர்நேகரா (Banjarnegara) பகுதியிலும்  ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் காணாமல்போயிருந்தனர்.

இந்நிலையில் பஞ்சர்நேகரா பகுதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட மீட்பு நடவடிக்கையின் போது 07 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் 18 பேர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் காவல்துறை மற்றும் ராணுவ வீரர்கள் உட்பட குறைந்தது 700 மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேடலில் பல தடைகளை நாங்கள் எதிர்கொள்கிறோம், குறிப்பாக குப்பைகளால் நிரம்பிய நிலச்சரிவு குளங்கள் மற்றும் தொடர்ந்து ஓடும் நீர் மழை காரணமாக புதிய நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக பேரிடர் தணிப்பு நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் முஹாரி தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்