செய்தி மத்திய கிழக்கு

காஸாவில் விமானத்தின் மூலம் நிவாரணப் பொருட்கள் – ஹமாஸ் விடுக்கும் கோரிக்கை

கஸாவில் விமானத்தின் மூலம் காஸாவில் நிவாரணப் பொருள்களைப் போடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ஹமாஸ் வலியுறுத்தியுள்ளது.

மேற்கத்திய நாடுகள் விமானங்களிலிருந்து போடப்பட்ட நிவாரணப் பொருள்கள் காஸாவின் கடலில் விழுந்தன. அவற்றை எடுப்பதற்காகச் சென்ற 12 பேர் தண்ணீரில் மூழ்கினர்.

ஆகாயத்திலிருந்து நிவாரணப் பொருள்களைப் போடுவது தவறான அணுகுமுறை, அதில் பயனில்லை என்று ஹமாஸ் கூறியது.

தரை வழியாக நிவாரணப் பொருள்களை அனுமதிக்க வேண்டும் என்று உதவிக் குழுக்களுடன் அதிகாரிகளும் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.

காஸாவின் சில பகுதிகளில் மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்.

நிவாரணப் பொருள்களைக் கொண்டுசெல்வதைத் தடுப்பதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டை இஸ்ரேல் மறுக்கிறது. உதவிக் குழுக்கள் முறையாகச் செயல்படவில்லை என்றும் அது சாடுகிறது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி