பொழுதுபோக்கு

மகளின் செயலால் அப்செட்டான ரஜினி.. இடத்தை காலி செய்துவிட்டாராம்…. மும்பையில் நடந்தது என்ன?

லால்சலாம் படப்பிடிப்பில் மெத்தனமாக இருக்கும் ஐஸ்வர்யாவால், ரஜினி அப்செட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..

லைகா நிறுவனம் தயாரிக்கும் லால் சலாம் படத்தில், ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது. இதில் ரஜினிகாந்த், சுமார் 20 நிமிட காட்சியில் வருவார் என்ற தகவல் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ரஜினிகாந்தின் கதாபாத்திரத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் மும்பையில் தொடங்கியது. மும்பையில் 2 வாரங்கள் ஷூட்டிங் நடக்கும் என கூறப்பட்ட நிலையில், 5 நாட்களிலேயே மும்பையில் இருந்து கிளம்பி சென்னை வந்துள்ளார் ரஜினி.

அவரை வைத்து 3 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட்ட நிலையில், நான்காவது நாள் ஷூட்டிங்கில் ரஜினிகாந்துடன் சேர்ந்து நடிக்கும் நடிகர் வராததால் படப்பிடிப்பு நடைபெறவில்லை.

ஐந்தாவது நாளும் அதே காரணத்திற்காக படப்பிடிப்பு நடைபெறாததால், டென்ஷனான ரஜினிகாந்த் மகளின் மெத்தனப்போக்கை நினைத்து கோவத்துடன் சென்னை வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும், ரஜினிகாந்தின் எஞ்சியுள்ள காட்சிகளை சென்னையில் செட் போட்டு படமாக்க திட்டமிட்டுள்ளாராம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ரஜினியின் கால்ஷீட்டுக்காக பலர் காத்திருக்கும் நிலையில், தன்னுடைய அப்பா என்பதால், ஐஸ்வர்யா ரஜினி, மெத்தனமாக இருந்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

(Visited 4 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content