குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு சிறை தண்டனை – ஆசிய நாடொன்றில் பரிந்துரை
சிங்கப்பூரில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை கட்டுப்படுத்தும் வகையில் புதிய சட்டத்திருத்தம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது,
இதற்கமைய வாகன ஓட்டுநர்களுக்கான மது வரம்பு பாதியளவுக்கும் மேலாகக் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் முறை குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் குற்றவாளிகளுக்குக் கூட, அவர்களின் இரத்தத்தில் மதுவின் அளவு மிக அதிகமாக இருந்தால், சிறைத் தண்டனையைப் பரிந்துரைக்க மத்திய உள்துறை அமைச்சகம் முன்மொழிந்துள்ளது.
மத்திய உள்துறைக்கான மூத்த இணை அமைச்சர் சிம் ஆன், தற்போதுள்ள 35 மைக்ரோகிராம் (mcg) என்ற மதுவின் வரம்பை 15 mcg ஆகக் குறைக்க பரிந்துரைத்துள்ளார்.
அதேநேரம் தற்போது 100 மில்லிக்கு 80 மில்லிகிராம் (mg) ஆக உள்ள இரத்த மதுவின் வரம்பு, 30mg ஆகக் குறைக்கப்படும்.
யாரும் தற்செயலாகக் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதில்லை என்றும், குற்றவாளிகள் வேண்டுமென்றே அவ்வாறு செய்து, தங்களையும் மற்றவர்களையும் ஆபத்தில் ஆழ்த்துகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




