ஆசியா

சிங்கப்பூரில் விலைவாசி உயர்வு – அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

சிங்கப்பூரில் கடந்த சில மாதங்களாக பாரிய அளவில் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது.

அதனை அரசாங்கம் கண்காணிக்கும் என்று மனிதவள மூத்த துணை அமைச்சர் Zaqy Mohamad தெரிவித்துள்ளார்.

இதனால் படிப்படியான சம்பள உயர்வு முறையின் கீழ் ஊழியர்களுக்குக் கூடுதல் சம்பளம் வழங்கப்படுகிறது.

அதனால் நிறுவனங்களின் வர்த்தகச் செலவுகள் அதிகரிக்கக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கழிவு நிர்வாக நிறுவனங்களின் ஊழியர்களைச் சந்தித்துப் பேசிய Zaqy அவ்வாறு கூறினார்.

அடுத்த மாதத்திலிருந்து கழிவு நிர்வாகத் துறையில் படிப்படியான சம்பள உயர்வு முறை நடப்புக்கு வரும். சுமார் 3,000 உள்ளூர் ஊழியர்களுக்குக் கூடுதல் சம்பளம் வழங்கப்படுவதுடன் துறையில் அவர்களுக்கான வேலை வாய்ப்புகளும் இன்னும் தெளிவாக இருக்கும்.

அதிகரிக்கும் சம்பளத்தைச் சமாளிக்க முதலாளிகளுக்கும் உதவி கிடைக்கும். படிப்படியாக உயரும் சம்பள உதவித்தொகைத் திட்டத்தின்கீழ், சம்பள உயர்வில் அரசாங்கம் 75 விழுக்காடு வரை நிதி வழங்கும்.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content