இலங்கை செய்தி

“கடற்படைக்குப் பாராட்டு” – திருகோணமலையில் ஜனாதிபதி உரை

மரியாதைக்குரிய, ஒழுக்கமான மற்றும் துணிச்சலான படையான கடற்படையில் இணைந்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

திருகோணமலையில் (13) சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 40 ஆவது ஆட்சேர்ப்பில் உள்வாங்கப்பட்ட இடைநிலை அதிகாரிகள், 65 ஆவது ஆட்சேர்ப்பில் உள்வாங்கப்பட்ட இடைநிலை அதிகாரிகள் மற்றும் ஏனைய அதிகாரிகள் பயிற்சிகளை நிறைவு செய்து வெளியேறிச் செல்லும் விடுகை அணிவகுப்பில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்த நாட்டில் மிகவும் மரியாதைக்குரிய, ஒழுக்கமான மற்றும் துணிச்சலான படையான கடற்படையில் இணைந்த அனைவருக்கும் வெற்றிகரமான தொழில் வாழ்க்கைக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பதவியைப் பொறுத்து வெவ்வேறு பொறுப்புகள் வழங்கப்பட்டாலும், ஒரு நிலையான அரசுக்கு ஒவ்வொரு பொறுப்பும் அவசியம் என்றும், தமக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளை முறையாக நிறைவேற்றுவதன் மூலம் மாத்திரமே ஒரு நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் என்றும், ஒவ்வொரு பொறுப்பும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அளிக்கப்படும் பங்களிப்பின் ஒரு பகுதியாகக் கருதப்பட வேண்டும் அவர் குறிப்பிட்டார்.

மேலும்,அண்மைய அனர்த்தத்தின் போது மக்களின் உயிரைக் காப்பாற்றுவதிலும் நிவாரண சேவைகளை வழங்குவதிலும் கடற்படை ஆற்றிய பங்களிப்பையும் பாராட்டியதுடன், மக்களின் உயிரைக் காப்பாற்ற தமது உயிரைத் தியாகம் செய்த அனைத்து அதிகாரிகளையும் இங்கு நன்றியுடன் நினைவு கூறுகின்றேன் எனவும் அவர் மேலும் கூறினார்.

AJ

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை