இலங்கை செய்தி

மன்னார் ஆயரிடம் ஆசிபெற்ற ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையைக்கும்  இடையிலான சந்திப்பு இன்று (16) மன்னார் ஆயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து காப்பாற்ற ஜனாதிபதி மேற்கொண்டுள்ள பொருளாதார சீர்திருத்த செயற்பாடுகளை பாராட்டிய மன்னார் ஆயர், மன்னார் மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளனர்.

மன்னாரில் இருந்து பருத்தித்துறை மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

மன்னாரை சுற்றுலா மையமாக அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் குறித்தும், உல்லாசப் பயணிகளுக்காக மன்னார் கோட்டையை அபிவிருத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்த செயற்பாடுகளுடன் எதிர்காலத்தில் மன்னார் மாவட்டத்தின் அனைத்து துறைகளிலும் பாரிய அபிவிருத்திகள் ஏற்படும் என குறிப்பிட்டார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை