இலங்கை

திருகோணமையில் நூதன முறையில் தொலைபேசி திருட்டு!

அம்பாறையில் மீன் வியாபாரி ஒருவரிடம் இருந்து கையடக்க தொலைபேசியை திருடிச் சென்ற நபரிடம் இருந்து கையடக்க தொலைபேசியை வாங்கித் தருகின்றேன் எனக்கூறி 1500 ரூபாய் பெற்றுச் சென்ற இரு சந்தேகநபர்கள் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்றிரவு (26) இடம்பெற்றுள்ளது சம்பவம் குறித்து தெரியவருவது,

அம்பாறை மாவட்டத்தில் இருந்து குளத்து மீன்களை வாங்குவதற்காக வருகை தந்த மீன் வியாபாரி மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொட்டவெவ பள்ளி வாசலுக்கு அருகிலுள்ள கடைதொகுதியில் உறங்கிக் கொண்டிருந்தபோது கையடக்க தொலைபேசியை ஒருவர் திருடிச் சென்றுள்ளார்.

இந்நிலையில் திருடிய நபரிடம் இருந்து கையடக்க தொலைபேசியை வாங்கி வருகின்றேன் எனக்கூறி மற்றுமொருவர் 1500 ரூபாய் பணத்தை வாங்கிச் சென்றுள்ளதாகவும் இரு சந்தேகநபர்கள் மீதும் சட்டநடவடிக்கை எடுக்குமாறும், குறித்த கையடக்க தொலைபேசி பெற்றுத் தருமாறு கோரி குறித்த மீன் வியாபாரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கையடக்க தொலைபேசியை திருடியவரும், திருடியதை வாங்கி வருகின்றேன் என தெரிவித்து பணத்தை வாங்கி சென்றவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் எனவும் தொடர்ச்சியாக இவ்வாறான மோசடியான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றவர்கள் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த முறைப்பாட்டை அடுத்து சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்துள்ளதாகவும் நாளைய தினம் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ரொட்டவெவ கிராமத்தில் வசித்து வரும் 45 மற்றும் 21 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்

(Visited 13 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content